என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
போனில் பாலியல் மிரட்டல் வருகிறது - நடிகை குஷ்பு பரபரப்பு புகார்
Byமாலை மலர்7 Aug 2020 7:14 AM GMT (Updated: 7 Aug 2020 7:14 AM GMT)
தனக்கு போனில் பாலியல் மிரட்டல் வருவதாக நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு வலைத்தளத்தில் அரசியல், சமூக விஷயங்கள் சம்பந்தமான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராகவும் இருக்கும் குஷ்பு தனக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் வந்திருப்பதாக கூறி மிரட்டிய நபரின் செல்போன் நம்பரையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த எண்ணில் இருந்து எனக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் வருகிறது. கொல்கத்தாவில் இருந்து இந்த அழைப்பு வந்துள்ளது. மிரட்டல் விடுத்தவர் பெயர் சஞ்சய் சர்மா என்று வருகிறது.
இதுகுறித்து கொல்கத்தா போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் இதை கவனிக்க வேண்டும் எனக்கே இந்த மிரட்டல் என்றால் மற்ற பெண்கள் நிலைமையை நினைத்து பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வலைத்தளத்தில் குஷ்புவுக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X