என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சொந்த ஊர் செல்லும்போது நேர்ந்த விபரீதம்.... விபத்தில் சிக்கி 22 வயது இளம் நடிகை பலி
Byமாலை மலர்28 May 2020 3:51 AM GMT (Updated: 28 May 2020 3:51 AM GMT)
22 வயதே ஆன இளம் நடிகை ஒருவர் சொந்த ஊர் செல்லும்போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் மடிக்கேரி பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கேல். அவருக்கு வயது 22. மாடலாக கலையுலகில் அறிமுகமான இவர் கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமானார். கொரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமல் பெங்களூருவில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை மாலை பெங்களூருவில் இருந்து நடிகை மெபினா தனது தோழிகளுடன் சொந்த ஊரான மடிக்கேரிக்கு காரில் சென்றுள்ளார். தேவிஹள்ளி பகுதி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் மெபினா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தோழிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X