என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஜோதிகா அப்படி பேசியதில் எந்த தவறும் இல்லை - லட்சுமி ராமகிருஷ்ணன்
Byமாலை மலர்28 April 2020 3:56 AM GMT (Updated: 28 April 2020 3:56 AM GMT)
ஜோதிகா சொன்னது சரியானது, அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகை ஜோதிகா கோவில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்று பேசியது எதிர்ப்பை கிளப்பியது. ஜோதிகாவை நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் கண்டித்தனர். இந்த நிலையில் ஜோதிகா பேச்சுக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது: ஜோதிகாவை ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள்? என்று எனக்கு புரியவில்லை. நான் அவருடையை பேச்சை முழுமையாக கேட்டேன். அதில் யாரையும் புண்படுத்தும் வகையில் தவறாக பேசவில்லை, அவர் சொன்னது சரியானது. இந்த கொரோனா துயரங்களுக்கு பிறகும் பாடங்களை கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். சிலர் மத அரசியல் செய்வது மோசமானது.
ஜோதிகா தனது பேச்சில் எந்த மதத்தையும் பற்றி குறிப்பிடவில்லை. நிஜமான சமூக அக்கறை மட்டுமே அவரது பேச்சில் பிரதிபலித்தது. அவரது பேச்சில் எந்த இடத்திலும் தவறு தெரியவில்லை. சிலரை அவரது பேச்சு வருத்தப்படுத்தி இருந்தால் அதை நாகரீகமாக சொல்லி இருக்கலாம். அவர்கள் கருத்துகளுக்கு ஜோதிகாவும் மதிப்பு அளித்து இருப்பார்.
இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X