search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஷால்
    X
    விஷால்

    4-வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் விஷால்?

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், மீண்டும் பிரபல இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    விஷால் தற்போது ‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆரம்பித்தபோது மிஷ்கின் இயக்கினார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மோதலால் மிஷ்கினை படத்தில் இருந்து நீக்கிவிட்டு, விஷாலே தற்போது இயக்கி வருகிறார். இத்துடன் எம்.எஸ்.ஆனந்த் இயக்கும் ‘சக்ரா’ படத்திலும் விஷால் நடிக்கிறார். இதில் ராணுவ அதிகாரியாக வருகிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா காஸண்ட்ரா ஆகிய இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். இந்த படத்தின் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் விஷால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விஷால், சுந்தர்.சி

    ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ‘மதகஜராஜா’, ‘ஆம்பள’, ‘ஆக்‌ஷன்’ ஆகிய மூன்று படங்கள் உருவாயின. இதில் ‘மதகஜராஜா’ படம் பண பிரச்சினையால் வெளியாகவில்லை. மற்ற படங்கள் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றன. இப்போது நான்காவது முறையாக புதிய படத்தில் இணைகிறார்கள். அதிரடி படமாக தயாராவதாக கூறப்படுகிறது. சுந்தர்.சி தற்போது ‘அரண்மனை’ படத்தின் 3-ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்ததும் விஷாலை வைத்து இயக்கும் படவேலைகளை தொடங்குகிறார். அத்துடன் முத்தையா இயக்கும் படத்திலும் விஷால் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
    Next Story
    ×