search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அர்ஜுன்
    X
    அர்ஜுன்

    கொரோனாவின் ஆபத்து தெரிந்தும் ஜாலியா சுத்தாதீங்க - அர்ஜுன் அட்வைஸ்

    கொரோனா வைரஸின் ஆபத்து தெரிந்தும் வெளியே ஜாலியாக சுற்றுவதை மக்கள் நிறுத்த வேண்டும் என நடிகர் அர்ஜுன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- “எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள். இது உங்களுக்காக மட்டுமல்ல, வயதான தாய், தந்தை, குழந்தை, குடும்பம் அனைவரையும் காப்பாற்றும் முயற்சியாகும். கொரோனா வைரஸ் தும்மினால், இருமினால் பரவும் என்று கூறினர். ஆனால் இப்போது காற்றிலும் இது இருக்கிறது என்கின்றனர்.

    அர்ஜுன்

    எனது நண்பர் ஒருவர் இத்தாலியில் நர்சாக இருக்கிறார். அவரிடம் பேசும்போது இத்தாலியில் ஒரு நாளைக்கு 5 ஆயிரத்து 500-ல் இருந்து 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றும், 550-ல் இருந்து 600 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் கூறினார். இதன் மூலம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணருங்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் ரசிகர்கள் மக்களுக்கு, “வெளியே வராதீர்கள்” என்று செல்போனில் தகவல் அனுப்பி தடுத்து நிறுத்துங்கள்.

    துப்பாக்கியை நமது தலையில் நாமே வைத்து இருப்பது போன்ற நிலைமையில் இருக்கிறோம். கொரோனா வைரஸ் ஆபத்து தெரிந்தும், வெளியே ஜாலியாக சுற்றுவதை நிறுத்துங்கள். வீட்டில் இருங்கள். குடும்பத்தையும், நாட்டையும் காப்பாற்றுங்கள்.” இவ்வாறு கூறியுள்ளார்.
    Next Story
    ×