என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
போலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்
Byமாலை மலர்26 March 2020 4:00 AM GMT (Updated: 26 March 2020 3:52 AM GMT)
ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவசமாக முக கவசங்களை வழங்கினர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முக கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் போலீசாருக்கும் போதிய அளவில் முக கவசங்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் 200 முக கவசங்கள் தயார் செய்யப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியை நேற்று நேரில் சந்தித்து விஜய் ரசிகர்கள் சார்பில் 200 முக கவசங்களை வழங்கினார். அப்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் உடன் இருந்தார். விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X