என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கொரோனா பீதி - ரசிகர்களுடனான சந்திப்பை தவிர்த்த அமிதாப்பச்சன்
Byமாலை மலர்16 March 2020 3:04 AM GMT (Updated: 16 March 2020 3:35 AM GMT)
கொரோனா வைரஸ் பீதி காரணமாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நேற்று ரசிகர்களுடனான சந்திப்பை தவிர்த்தார்.
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் 1969-ல் ‘சாட்ஹிந்துஸ்தானி’ படத்தில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் 190 படங்களுக்கு மேல் நடித்து உலக ரசிகர்களை தன்பால் இழுத்து வைத்துள்ளார். இந்தி நடிகை ஜெயபாரதியை திருமணம் செய்து கொண்டார். பல தேசிய விருதுகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். அமிதாப்பச்சனுக்கு இப்போது 77 வயது ஆகிறது.
இந்திப்பட சூப்பர் ஸ்டாராக கருதப்படும் அமிதாப்பச்சன், கடந்த 37 ஆண்டுகளாக ஞாயிற்றுக்கிழமை தோறும் மும்பை ஜூகுவில் உள்ள தனது ஜல்சா பங்களாவில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக நேற்று ரசிகர்களை சந்திப்பதை தவிர்த்தார். மேலும் அவர் இது குறித்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி, ரசிகர்கள் வீட்டின் முன் திரளவேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X