search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மிஷ்கின் போஸ்டர் ஒட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்
    X
    மிஷ்கின் போஸ்டர் ஒட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

    போஸ்டர் ஒட்டிய மிஷ்கின்

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின் பாரம் படத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டி உள்ளார்.
    தேசிய விருதை வென்ற ‘பாரம்’ திரைப்படம் பிப்ரவரி 21 அன்று வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பாரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் மிஷ்கின் இந்த படம் வெளியாகும்போது நான் விளம்பரத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன் என கூறி இருந்தார்.


    சொன்னபடியே அவர் தற்போது அதை செய்து காட்டியுள்ளார். பாரம் படத்திற்காக அவர் தனது சொந்த செலவில் போஸ்டர் ஒட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ‘பாரம்’ படம் மீது இயக்குநர் மிஷ்கின் காட்டிவரும் அன்புக்கு விலைமதிப்பே கிடையாது என அப்படத்தின் இயக்குனர் பிரியா கிருஷ்ணசுவாமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×