என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சைக்கோ 2-வில் நடிக்க உதயநிதி விருப்பம்
Byமாலை மலர்3 Feb 2020 5:08 AM GMT (Updated: 3 Feb 2020 5:08 AM GMT)
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க உதயநிதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ராஜ், சிங்கம் புலி, அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சைக்கோ’. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றிணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “ஹிட் படம் கொடுத்து 3 ஆண்டுகளாகிவிட்டது. கடைசி 4 படங்களான ‘இப்படை வெல்லும்‘, ‘பொதுவாக எம்மனசு தங்கம்‘, ‘நிமிர்’ மற்றும் ‘கண்ணே கலைமானே’ ஆகியவை சரியாக போகவில்லை. ஆனால் எதுவும் மோசமான படமல்ல. இந்த விழாவுக்கு 3 முக்கிய நபர்களான இசைஞானி இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் வரவில்லை.
அவர்களுக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனக்கு அதிதி ராவ் தான் ஜோடி. ஆனால், எனக்கும் அவருக்கும் 2 நாட்கள் தான் படப்பிடிப்பு இருந்தது. அப்படியொரு ஒரு காதல் கதை இது. இந்தப் படத்தில் ராஜுக்கும் அவருக்கும் தான் கெமிஸ்ட்ரி அதிகம். கடைசியில் அவரிடமே சாவியைக் கொடுத்துவிட்டு என்னை டம்மி ஆக்கிவிடுவார்கள். அப்படியே ‘காதல் கொண்டேன்’ படம் தான். அதில் தனுஷ் தான் கடத்திக்கொண்டு போவார்.
இறுதியில் அவர் இறந்துவிடுவார். அவர் தான் படத்தின் நாயகன். அப்படிப் பார்த்தால் படத்தில் ராஜ் தான் ஹீரோ. நான் அவருடன் நடித்துள்ளேன். அன்றிலிருந்தே ‘சைக்கோ 2’ பண்ணுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாகப் பண்ணுவோம். இந்தப் படத்தின் வெற்றிக்காக மிஷ்கின் சாருக்கு ரொம்பவே கடமைப்பட்டு இருக்கேன். கண்டிப்பாக ‘சைக்கோ 2’ நடக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X