என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தூர் வாரிய கண்மாய் நிலையை கண்டு வேதனையடைந்த சௌந்தரராஜா
Byமாலை மலர்28 Nov 2019 3:01 PM GMT (Updated: 28 Nov 2019 3:01 PM GMT)
தமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகர் சௌந்தரராஜா, தான் தூர் வாரிய கண்மாய் நிலையை கண்டு மிகவும் வேதனையடைந்திருக்கிறார்.
சுந்தரபாண்டியன், தர்மதுரை, பூஜை, ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் நடித்த நடிகர் சௌந்தரராஜா, ஆகஸ்ட் மாதம் பனை விதைகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கண்மாய் கரையை தூர்வாரி தனது மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளையின் 2ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடிகர் சௌந்தரராஜா பனை விதைகளை நட்டார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு அங்கு சென்ற சௌந்தரராஜா, குப்பையால் சூழ்ந்திருப்பதை கண்டு மிகவும் வேதனை அடைந்திருக்கிறார். பனை விதைகள் நட்ட இடங்களே தெரியாதளவிற்கு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் பொதுமக்கள் பலரும் இதுபோன்ற கண்மாய்களை சுத்தமாக வைத்திருக்கவும், அப்படி வைத்திருந்தால்தான் மழைக்காலங்களில் நீரை சேமிக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X