search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கார்த்தி
    X
    கார்த்தி

    டில்லி மீண்டும் வருவான் - கைதி 2 படத்தை உறுதி செய்த கார்த்தி

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் கைதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று நடிகர் கார்த்தி கூறியிருக்கிறார்.
    மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கைதி’. இதில் கார்த்தி, நரேன், ஹரிஷ் உத்தமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் பலரும் கேட்டனர். அதற்கு அவர் ‘டில்லி மீண்டும் வருவான்’ என்று கூறியிருந்தார். மேலும் நடிகர் கார்த்தியிடம் 30 நாட்கள் கால்ஷீட் இருந்தால் போதும் கைதி 2ம் பாகத்தை உருவாக்கி விடலாம் என்று கூறினார்.

    கார்த்தி ட்விட்

    தற்போது நடிகர் கார்த்தி அதை உறுதி செய்திருக்கிறார். உங்களுக்காக டில்லி மீண்டும் வருவான் என்று கூறியிருக்கிறார். கைதி படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் டில்லி. மேலும் இப்படத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கான லீட் கொடுத்திருப்பார்கள். 
    Next Story
    ×