என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தர்பார் பட வெற்றிக்காக கேதார்நாத் கோவிலில் ரஜினி பிரார்த்தனை
Byமாலை மலர்16 Oct 2019 11:06 AM GMT (Updated: 16 Oct 2019 11:06 AM GMT)
தர்பார் படத்தின் வெற்றிக்காக கேதார்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தர்பார்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த் 10 நாட்கள் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ளார். கடந்த 13-ந் தேதி காலை விமானத்தில் புறப்பட்டு உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் சென்றார். அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷும் உடன் சென்றுள்ளார்.
திங்கட்கிழமை கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் உள்ள கோயில்களில் பிரார்த்தனை செய்த ரஜினி, தரிசனத்துக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தர்பார்’ படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படத்தின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்ய இங்கு வந்தேன்” என்றார்.
இதேபோன்று பல்வேறு கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்யவுள்ள ரஜினி, துவாராகாட்டில் தான் கட்டியுள்ள குருசரண் ஆசிரமத்தில் 2 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் இந்த இமயமலை சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை ரஜினியின் நண்பர் ஹரி செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X