search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கேதார்நாத்தில் ரஜினிகாந்த்,
    X
    கேதார்நாத்தில் ரஜினிகாந்த்,

    தர்பார் பட வெற்றிக்காக கேதார்நாத் கோவிலில் ரஜினி பிரார்த்தனை

    தர்பார் படத்தின் வெற்றிக்காக கேதார்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
    தர்பார்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த் 10 நாட்கள் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ளார். கடந்த 13-ந் தேதி காலை விமானத்தில் புறப்பட்டு உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் சென்றார். அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷும் உடன் சென்றுள்ளார். 

    திங்கட்கிழமை கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் உள்ள கோயில்களில் பிரார்த்தனை செய்த ரஜினி, தரிசனத்துக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தர்பார்’ படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படத்தின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்ய இங்கு வந்தேன்” என்றார்.

    ரஜினிகாந்த்,

    இதேபோன்று பல்வேறு கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்யவுள்ள ரஜினி, துவாராகாட்டில் தான் கட்டியுள்ள குருசரண் ஆசிரமத்தில் 2 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் இந்த இமயமலை சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை ரஜினியின் நண்பர் ஹரி செய்துள்ளார்.
    Next Story
    ×