என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் விஜய் ரசிகர்கள்
Byமாலை மலர்27 Sep 2019 3:55 AM GMT (Updated: 27 Sep 2019 3:55 AM GMT)
விஜய்யின் அறிவுரையை ஏற்று சமூக பிரச்சனைகளுக்கு அவரது ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி குரல் கொடுத்து வருகின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பிகில் படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனால் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. குறிப்பாக “யார எங்க உட்கார வைக்கனுமோ, அங்க உட்கார வைக்கனும்”, சுபஸ்ரீ விவகாரம் போன்றவற்றை குறிப்பிட்டு விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் விவாத பொருளாகவும் மாறியது.
மேலும் சமூக பிரச்சனைகளுக்கு டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி குரல் கொடுங்கள் என ரசிகர்களுக்கு விஜய் அறிவுறுத்தினார். இதனை பின்பற்றும் விஜய் ரசிகர்கள் ஏற்கனவே #JusticeForSubashri, #KeezhadiTamilCivilization போன்றவற்றை டிரெண்டாக்கி கவனம் ஈர்த்தனர். இந்நிலையில் தேனியில் நியூட்ரினோ ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #SaveTheniFromNEUTRINO போன்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X