என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை - விக்னேஷ் சிவன்
Byமாலை மலர்20 Sep 2019 5:07 AM GMT (Updated: 20 Sep 2019 5:07 AM GMT)
சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன், நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை என்று நயன்தாராவை புகழ்ந்து கூறியிருக்கிறார்.
தென்னிந்திய பட உலகில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் நயன்தாராவுக்கு 34 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் ஏற்பட்ட காதல் முறிந்து போனது. அதன்பிறகு நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்து இப்போதுவரை நீடித்து வருகிறது.
இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், கோவில்களுக்கு சென்று வருவதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரே வீட்டில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலை நெருக்கமானவர்கள் மறுத்தனர்.
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வந்த சில படங்கள் தோல்வி அடைந்ததால் திருமணத்துக்கு தயாராவதாக கூறப்படுகிறது. தான் நடிக்கும் நெற்றிக்கண் படத்தில் காதலர் விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக்கி உள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நண்பர்களை அழைத்து நயன்தாரா கொண்டாடினார்.
அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த கொண்டாட்டம் குறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை. இது ஆசீர்வதிக்கப்பட்ட பிறந்த நாள்” என்று பதிவிட்டுள்ளார். நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.
வருகிற டிசம்பர் மாதம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X