என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா
Byமாலை மலர்18 Sep 2019 10:33 AM GMT (Updated: 18 Sep 2019 10:33 AM GMT)
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், விரைவில் அவர் புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.
தனி ஒருவன் படம் மூலம் அழுத்தமான முத்திரை பதித்த இயக்குனர் மோகன் ராஜா விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- ’அசின் முதல் நயன்தாரா வரையில் என் நாயகிகள் இல்லாமல் என் வெற்றி சாத்தியமாகி இருக்காது. சினிமாவில் பெரும் அனுபவம் நிறைந்த நடிகையாகவே நயன்தாரா உள்ளார்.
அவரது தேர்வுகளிலும் முடிவுகளிலும் அவ்வளவு நேர்த்தி வெளிப்படுகிறது. நடிப்பில் மட்டுமல்லாது சினிமா சார்ந்த அத்தனை தொழில்நுட்பங்களிலும் மிகந்த தேர்ச்சியோடு நயன்தாரா இருக்கிறார். இதனால் அவர் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பார் என்றே நினைக்கிறேன். அதற்கான அத்தனைத் தகுதிகளையும் வளர்த்துக்கொண்டுள்ளார். அடுத்ததாக தனி ஒருவன் இரண்டாம் பாகத்திலும் நயன்தாராவே நாயகியாக உள்ளார்” எனப் பேசினார்.
நடிகை நயன்தாரா தற்போது தர்பார் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். தீபாவளியன்று விஜய் உடனான பிகில், அதைத்தொடர்ந்து தெலுங்கில் சயிரா நரசிம்மா ரெட்டி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதற்கிடையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’ படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X