search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அஜித், எச்.வினோத்
    X
    அஜித், எச்.வினோத்

    அஜித் பட கதையில் மாற்றம்

    நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் அஜித் - எச்.வினோத் கூட்டணி இணைந்து படம் எடுக்கவுள்ளனர். இதன் முதல்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

    காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். விரைவில் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதையை முழுமையாக முடித்து அஜித்திடம் கூறியுள்ளார் எச்.வினோத். கதை அருமையாக இருக்கிறது. எனது முந்தைய 2 படங்களுமே பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

    போனி கபூர், அஜித்

    இந்தக் கதையும் நன்றாக இருக்கிறது. ஆனால், கொஞ்சம் குடும்ப சென்டிமெண்ட் மற்றும் எமோஷனல் காட்சிகள் குறைவாகவுள்ளது. அதை மட்டும் இந்தக் கதையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள் என வினோத்துக்கு அஜித் பரிந்துரை செய்துள்ளார். தற்போது இந்த கதையில் அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறார்கள்.
    Next Story
    ×