search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அமீர்
    X
    அமீர்

    பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை - அமீர்

    பட விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் அமீர், பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
    ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

    இதில் அமீர் பேசும்போது, ‘எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றியைப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாக பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகை தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது. 

    சேரன்

    அந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததுக் கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். மேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது’ என்றார்.
    Next Story
    ×