search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    குஷ்பு
    X
    குஷ்பு

    ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற குஷ்பு

    காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வரும் குஷ்பு, மீண்டும் சினிமாவில் நடிக்குமாறு ரசிகர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுள்ளார்.
    தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. சின்னத்தம்பி, அண்ணாமலை, பாண்டியன், சிங்காரவேலன் என வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகி ஆனார். இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட இவர், அடுத்து அரசியலிலும் களம் இறங்கினார். 

    தற்போது காங்கிரசின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று டுவிட்டரில் பகிர்ந்த ஒரு பதிவில் மீண்டும் படங்களில் நடிக்கலாமா, வேண்டாமா என்று ரசிகர்களிடம் கேட்டார்.

    அந்த டுவிட்டில் ‘உங்களின் அறிவுரை தேவை நண்பர்களே... நான் மீண்டும் படங்களில் நடிக்கட்டுமா? கூட்டத்தில் ஒருத்தியாக இல்லாமல் சுவாரசியமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். என் மூத்த மகள் கல்லூரிக்கு சென்று விட்டதால் தற்போது நேரம் உள்ளது...நடிக்கட்டுமா?’ என்று கேட்டு இருந்தார்.

    குஷ்புவின் டுவிட்டர் பதிவு

    குஷ்புவின் டுவிட்டை பார்த்தவர்கள் குஷ்பு கண்டிப்பாக மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்றனர். தனக்கு இப்படி அமோக ஆதரவு இருப்பதை பார்த்த குஷ்பு மீண்டும் படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளார். கஸ்தூரி, மனோபாலா போன்றோர் குஷ்பு மீண்டும் நடிக்க ஆதரவு கொடுத்துள்ளனர்.

    ரசிகர்கள், ‘மீண்டும் நடிக்க வந்தாலும் முக்கியத்துவமான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும். அம்மா, அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டாம்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இணைய தொடர்களில் நடிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். சில ரசிகர்கள், ‘சினிமாவில் நடித்தாலும் அரசியலை விட்டு விலக வேண்டாம்’என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×