என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாற்றுத்திறனாளியை பாராட்டிய ரஜினி
Byமாலை மலர்5 Jun 2019 5:54 AM GMT (Updated: 5 Jun 2019 5:54 AM GMT)
ரத்ததானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாற்றுத்திறனாளி பிரகாஷை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
மும்பை, ஒர்லி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மாற்றுத்திறனாளி. தமிழரான இவர், விளையாட்டு மற்றும் சமூக பணிகளில் ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 26 ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான முறை ரத்ததானம் செய்து உலக சாதனை படைத்து உள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரகாஷ் மும்பையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த் ரத்ததானத்தில் உலக சாதனை புரிந்த பிரகாசை பாராட்டினார். இது குறித்து பிரகாஷ் கூறியதாவது:-
ரத்த தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ரத்த தானம் செய்து வருகிறேன். இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து 18 மாநிலங்களில் ரத்த தானம் செய்து உள்ளேன். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரத்த தானம் செய்ய திட்டமிட்டு உள்ளேன். மாற்றுத்திறனாளியான என்னால் ரத்த தானம் செய்ய முடியும் போது மற்றவர்களாலும் செய்ய முடியும் என்பதை உணர்த்தவே இதுபோல் செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X