என் மலர்
சினிமா

செல்போன் வைத்திருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய படம் கீ
காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கீ’ படத்தை குழந்தைகள் முதல் முதியவர் வரை செல்போன் வைத்திருக்கும் அனைவரும் பார்க்க வேண்டும் என்று இயக்குநர் கூறியுள்ளார். #KEE #Jiiva
நாடோடிகள், ஈட்டி, மிருதன், போன்ற வெற்றி படங்களை தயாரித்த குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் செராபின் ராயப்பன் தயாரித்துள்ள படம் ‘கீ’.
இந்த நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக உருவாகி இருக்கும் இந்த படத்தை செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காலீஸ் இயக்கியிருக்கிறார். ஜீவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ளனர். அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போதைய தொழில்நுட்ப உலகில் செல்போன்கள் இல்லாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு செல்போனின் தேவையும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதுப்புது செல்போன்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.

இவ்வாறாக செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக கீ உருவாகி இருக்கிறது. செல்போன் வைத்திருப்பதால் ஏற்படும் பாதிப்பை படம் பேசுகிறது. ஒரு 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.
நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன? என்பதை பற்றி படத்தில் விவரித்திருப்பதாக இயக்குநர் காலீஸ் கூறினார்.
விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏப்ரல் 12-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. #KEE #Jiiva #NikkiGalrani
Next Story






