search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகை தனுஸ்ரீதத்தா பொய் சொல்கிறார் - நானா படேகர் விளக்கம்
    X

    நடிகை தனுஸ்ரீதத்தா பொய் சொல்கிறார் - நானா படேகர் விளக்கம்

    நடிகை தனுஸ்ரீதத்தா, பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருக்கும் நிலையில், அவர் பொய் சொல்வதாக நானா படேகர் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார். #TanushreeDutta #NanaPatekar
    பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. 2005-ம் ஆண்டு வெளியான ‘ஆசிக் பனாயா ஆப்னே’ என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

    பல்வேறு படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து தனுஸ்ரீதத்தா பிரபலம் ஆனார். தமிழில் நடிகர் விஷாலுடன் இணைந்து தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது தனுஸ்ரீதத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    2008-ம் ஆண்டு “ஹார்ன் ஒகே பிளீஸ்” என்ற இந்தி படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று புகார் கூறி இருந்தார். மேலும் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டேன் என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.

    அதோடு நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங்க் ஆகியோர் மீது மும்பை ஓகீவாரா போலீஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தனுஸ்ரீதத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு நானா படேகர் ஏற்கனவே மறுத்து இருந்தார்.



    இந்த நிலையில் அவர் மீண்டும் இந்த குற்றச்சாட்டை மறுத்து இருக்கிறார். இது தொடர்பாக நானா படேகர் தனது வீட்டு முன்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த புகார் தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பே நான் விளக்கம் அளித்துவிட்டேன். இந்த புகார்கள் பொய்யானது. தனுஸ்ரீ தத்தா பொய் சொல்கிறார். என்னுடைய வக்கீல்கள் இது குறித்து பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இதனால் என்னால் அதிகமாக இதுபற்றி பேச இயலாது. இதற்காக மன்னித்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு நானா படேகர் கூறியுள்ளார்.

    மேலும் அவர் நிருபர்களை சந்தித்து விரிவாக கொடுக்க இருந்த பேட்டியையும் ரத்து செய்தார். #TanushreeDutta #NanaPatekar

    Next Story
    ×