என் மலர்
எங்களுடைய திரைப்பட இயக்குனர்கள் சங்க அலுவலகம் வடபழனி குமரன் நகரில் செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்தை வளசரவாக்கத்திற்கு இடமாற்றம் செய்துவிட்டோம். இதனால் சங்கத்தை புதுப்பிப்பது தொடர்பான கடிதம் பழைய முகவரிக்கு சென்றதால் எங்கள் கவனத்துக்கு வராமலே இருந்துவிட்டது. இதனால் சங்கத்தை புதுப்பிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது புதிய முகவரியில் செயல்படும் எங்கள் சங்கத்தை புதுப்பித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்,
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.
நான் நடிகை பாபிலோனாவின் பாட்டி. பாபிலோனாவை நான் தான் வளர்த்தேன். அவரை திரைஉலகத்தில் அறிமுகப்படுத்தி பிரபல நடிகையாக வளர்த்துவிட்டதும் நான் தான்.
எனது பேத்தி பாபிலோனா தற்போது மந்திரவாதி ஒருவரின் பிடியில் சிக்கியுள்ளார். வசியக்கலை மூலம் எனது பேத்தியை வசியப்படுத்தி, அந்த மந்திரவாதி தனது பிடியில் வைத்துள்ளார். எனது பேத்தியின் நகைகள் மற்றும் பணம் அனைத்தையும் அவர் அபகரித்து விட்டார்.
அந்த மந்திரவாதி திருமணமானவர். அவரால் எனது பேத்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுபற்றி நான் நேரிடையாக சென்று மந்திரவாதியிடம் பேசினேன். எனது பேத்தியை விட்டுவிடுமாறு கெஞ்சினேன். ஆனால் அந்த மந்திரவாதி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து தவறாக பேசினார்.
பாபிலோனாவை சிறைவைத்துள்ள மந்திரவாதி பல்வேறு குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிகிறது. எனவே பாபிலோனாவை குறிப்பிட்ட மந்திரவாதியிடம் இருந்து பத்திரமாக மீட்கவேண்டும். மந்திரவாதி மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக 2006-ம் ஆண்டு அறிமுகமானேன். தற்போது வரை 23 படங்களில் நடித்துள்ளேன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ளேன். இந்த தயாரிப்பாளர் கவுன்சிலில் என் தந்தை 25 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளார். என் மூத்த சகோதரனும் உறுப்பினராக உள்ளார்.
கடந்த ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், நடிகர் நாசர் தலைவர் பதவிக்கும், நான் பொதுச் செயலாளர் பதவிக்கும் போட்டியிட்டோம். எங்களுக்கு எதிராக நடிகர் ராதாரவி அணி போட்டியிட்டது. இந்த தேர்தலில், ராதாரவி அணிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.தாணு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.
இதில், ஏற்பட்ட முன்பகையினால், என்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்து எஸ்.தாணு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நடவடிக்கை குறித்து வாரப்பத்திரிகை ஒன்றுக்கு போட்டியளித்தேன். அப்போது இந்த சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சில கருத்துகளை தெரிவித்து இருந்தேன். அந்த கருத்துகள் கூட அவதூறானது இல்லை.
இதுபோன்ற கருத்துகளை ஒருவர் தெரிவிக்கும்போது, சங்கத்தின் நிர்வாகிகள் அதை ஒரு விமர்சனமாக எடுத்துக்கொண்டு, முன்பை விட சிறப்பாக செயல்படவேண்டும் என்று எண்ணவேண்டும்.
ஆனால், சங்கத்தை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்தற்கு 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கடந்த செப்டம்பர் 2-ந் தேதி எனக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நோட்டீசு அனுப்பியது. நானும் இதற்கு செப்டம்பர் 8-ந் தேதி விளக்கம் அளித்து கடிதம் அனுப்பினேன். அதில், நான் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் உள்நோக்கம் இல்லாதது என்று கூறியிருந்தேன்.
ஆனால், என்னை தயாரிப்பாளர் கவுன்சிலில் இருந்து 3 மாதம் இடைநீக்கம் செய்து கடந்த 14-ந் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு உள்நோக்கமானது. தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் நான் பங்கேற்கக்கூடாது என்பதற்காக இந்த இடைநீக்கம் உத்தரவை உள்நோக்கத்துடன் பிறப்பித்துள்ளனர்.
மேலும், தயாரிப்பாளர் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள நடிகர் கருணாஸ், நான் தெரிவித்த அதே கருத்தை மற்றொரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்தார். ஆனால், அவர் மீது தயாரிப்பாளர் கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை மட்டும் இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அந்த இடைநீக்கம் உத்தரவை ரத்து செய்யவேண்டும். அந்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் தலைவர் எஸ்.தாணுவுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். விசாரணை டிசம்பர் 6-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் அமீர்கானின் உறவினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக போலீசார் அமீர்கான் வீட்டில் பணிபுரிந்து வரும் வேலைக்காரர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. காலையில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்படும் வேலைக்காரர்கள் மாலையில் தான் திரும்ப விடப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண்ராவ் கருத்து கூற மறுத்துவிட்டனர்.
"16 வயதினிலே'' படத்தின் பாடல் பதிவு அனுபவம் பற்றி இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-
"பட்ஜெட் படம் என்னும்போது செலவுகளை ஆரம்பத்தில் இருந்தே மட்டுப்படுத்தியாக வேண்டும். அதை மனதில் வைத்தே என் இசை சம்பந்தப்பட்ட பாட்டு விஷயத்தில் நானும் முயற்சி செய்தேன். அந்த அடிப்படையில்தான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம் பாட்டுக்கான சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள்ளச் சொன்னேன்.
நான் கேட்டுக்கொண்ட சம்பளக் குறைப்பு பற்றி கண்ணப்பன் கவிஞரிடம் சொல்லியிருக்கிறார். அவரோ, "பணம் என்னடா பணம்! அதெல்லாம் ஒரு விஷயமா! வா, ராஜாவுக்கு நாம பாட்டு எழுதிட்டு வரலாம்'' என்று புறப்பட்டு நேராக வந்துவிட்டார்.
பாடல் வரவேண்டிய இடத்துக்கான காட்சியை கவிஞரிடம் பாரதி விவரித்து சொன்னார். உடனே என்னைப் பார்த்த கவிஞர் "என்ன டிïன்?'' என்று கேட்டார்.
நான் பக்கவாத்தியங்களோடு அந்த மெட்டை பாடிக்காட்டினேன். பாரதி, அரைகுறை மனதுடன் "ஓகே'' செய்த மெட்டு அது.
"16 வயதினிலே'' கிராமத்து பின்னணியில் அமைந்த படம் என்பதை மனதில் கொண்ட கவிஞர், சிறிது நேரம் யோசித்துவிட்டு, "செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா ஹோய் சின்னக்கா'' என்று எழுதினார்.
இரண்டாவது பாடல், மயிலிடம் சப்பாணி பாடுவதுபோல் வருகிறது. சந்தைக்குப் போகும் சப்பாணியும் மயிலும் நடந்து போகும் வழியில் பாடும் பாட்டு. மயில் வருத்தத்தில் இருக்க அவளை சப்பாணி சந்தோஷப்படுத்த முயற்சிக்கிற மாதிரியான பாட்டு.
இதில் சப்பாணி (கமலஹாசன்) பாடிக்கொண்டே போக, இடையில் ஒரு ஹம்மிங்கோடு ஒரு பெண் குரல் ஒன்று ஒலிக்கிறது.
மயிலும் சப்பாணியும் எங்கிருந்து வருகிறது அந்தப் பெண் குரல் என்று தேடித்தேடி பார்க்கிறார்கள். கடைசியில் ஒரு கிழவி பாடுவதாக காட்டப்படும் என்று பாரதி, கவிஞரிடம் விளக்கினார்.
நானும் பாரதியும் ஏற்கனவே இந்தப் பாட்டி பற்றி யோசித்து வைத்திருந்தோம். "என்ன பாட்டி! மஞ்சக் குளிச்சிருக்கியே!'' என்று கேட்டு, "பழைய நினைப்புடா பேராண்டி'' என்று சொல்லும் கிராமத்துப் பேச்சை நினைவில் வைத்திருந்தோம். அதாவது, இப்படி கிழவி சொல்கிற மாதிரி முடிந்தால் நன்றாக இருக்கும் என்பது எங்கள் கருத்து. ஆனால் அதை கவிஞரிடம் சொல்லவில்லை.
கவிஞரோ பாடலை "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' என்று தொடங்குவதாக அமைத்து கிழவி காட்டப்படும்போது "பழைய நினைப்புடா பேராண்டி... பழைய நினைப்புடா!'' என்று அவள் சொல்வது போல் முடித்தார்.
நாங்கள் சொல்லாமலே, கவிஞர் எங்கள் மனதில் இருந்ததை எழுதியது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கவிஞருக்கு இருந்த சரஸ்வதி கடாட்சம் அது.
"செவ்வந்தி பூ முடிச்ச'' பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பாட வைக்கலாம் என்று முடிவு செய்து, ரிகர்சலுக்கு அழைத்தோம். பாலு வந்தார். ரிகர்சல் எல்லாம் முடிந்து கிளம்பும்போது பாலுவை தனியாக அழைத்தேன். "பாலு ராத்திரியெல்லாம் வெளியே சுத்தறதை விட்டுடு. நண்பர்களுக்காக வெளியே போனேன். விடிய விடிய ஊர் சுத்தினதுல தொண்டை கட்டிக்கிட்டுதுன்னு சொல்லாதே. இல்லேன்னா இந்தப் பாடல் வேறு யாருக்காவது போய்விடும்'' என்று சொன்னேன்.
பாலுவும் `சரி' என்று சொல்லிப் போனதோடு சரி.
மறுநாள் காலை 7 மணிக்கு ஏவி.எம்.மில் பாடலுக்கான மிïசிக்கையெல்லாம் கம்போஸ் செய்து விட்டேன். `டிபன் பிரேக்'கை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் பூஜை தொடங்கியது.
ரிகர்சல் தொடங்கி பாடலுக்கான வடிவங்களை தயார் செய்த நிலையில் 11 மணி.
பாலு அப்போதும் வரவில்லை. ஆளாளுக்கு தேடினோம். 11-30 மணிக்கு பாலு என்னிடம் நேராக வந்து, "டேய்! தொண்டையெல்லாம் கட்டிப் போச்சுடா...'' என்று, கட்டைக்குரலில் விஷயத்தை சொன்னான்.
"பார்த்தியா? நேத்தே நான் சொன்னேன் இல்லையா? அதையே செஞ்சிட்டு வந்து நிக்கறியே'' என்றேன்.
என்னிடமும் பாரதியிடமும் `சாரிடா' என்று சொல்லிவிட்டு பாலு கிளம்பிவிட்டான்.
எல்லாம் ரெடியாகிவிட்டது. ஜானகி கோரஸ் ரிகர்சல் கூட முடிந்து விட்டது.
பாலுவுக்குப்பதிலாக யாரை பாட வைப்பது? அப்போது `டிராக்'கை தனியாக ரெக்கார்டு செய்யும் பழக்கம் கிடையாது. மேலும் அது பூஜையின்போது பதிவு செய்யப்படும் பாட்டு. பாடுபவர் இருக்க வேண்டும்.
யோசித்தேன். என் கண்ணில் பூஜைக்கு வந்த மலேசியா வாசுதேவன் பட்டார்.
மலேசியா வாசுதேவனை அழைத்தேன். "இந்தப் பாட்டை கத்துக்கோ'' என்று பாடலை சொல்லிக் கொடுத்தேன்.
அதன்படி வாசுவும் பாட, பாடலை பதிவு செய்தேன்.
மதிய உணவுக்குப்பிறகு, "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' பாடலை பதிவு செய்யவேண்டும்.
இதை சப்பாணி போலவே பாட வைக்க வாசுவை தயார் செய்தேன்.
ஆனால் வாசுவோ ரிகர்சலில் எல்லாம் சரியாக பாடிவிட்டு, "டேக் போகும்போது மாற்றி பாடிவிட்டார். `பாடத் தெரியாதவன் போல் பாடினால் நமக்கு பாடத்தெரியாது என்று எல்லோரும் நினைத்து விடுவார்களோ' எனப்பயந்து, சாதாரண பின்னணி பாடகர் போல
பாடிவிட்டார்.இதுவரை வராத பாடலாக இருக்க வேண்டும் என நான் எடுத்த முயற்சியெல்லாம் இப்போது விழலுக்கிறைத்த
நீராகிவிட்டது.இப்போதும் அந்தப் பாடலை நீங்கள் கேட்டுப் பாருங்கள். ஒரு அறியாத பட்டிக்காட்டான் பாட்டில் வரும் எளிமைத்தனம் அதில் இருக்காது. விவரம் புரிந்த கிராமத்தான் பாடுவது போல்தான் இருக்கும்.
இதுபோன்ற இழப்புகள் ஒரு இசையமைப்பாளர் என்ற முறையில் ஏராளம்.
அடுத்த பாடல் ரெக்கார்டிங் செய்யவேண்டிய நேரம் வந்தது.
மயில் (ஸ்ரீதேவி) தன் கற்பனையில் தனக்கு வரும் காதலன் எப்படி இருப்பான் என்று கனவு காணும் மனநிலையில் பாடும் பாட்டு என்று பாரதி சொன்னார்.
அப்போதெல்லாம் எந்த டைரக்டரும் இசையமைப்பாளரிடம் `இந்தப்பாடல் இதுபோல இருக்கலாம். அல்லது இந்த மாதிரி இருக்கலாம்' என்று அபிப்ராயமோ, ஆலோசனையோ சொல்வது கிடையாது. பாடல் சூழ்நிலையை விளக்கிவிட்டு, அத்துடன் விட்டுவிடுவார்கள். இசையமைப்பாளரும், கவிஞரும் என்ன கொடுக்கிறார்களோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.
தேவைப்பட்டால் சிறுசிறு மாற்றம் வேண்டுமென்று கேட்பார்கள். அதை அவர்களும் உடனே செய்து விடுவார்கள்.
அந்தப் பாடல் காட்சிக்கு சில டிïன்களை போட்டேன். எதுவும் பாரதிக்கு பிடித்த மாதிரி தெரியவில்லை. பின்னர் ஒரு டிïனை போட்டு, "பாரதி! இது நன்றாக இருக்கும்'' என்று வற்புறுத்தினேன். அதுதான் "செந்தூரப்பூவே...'' பாடல் மெட்டு. மெட்டு நன்றாக அமைந்துவிட்டதால் மேற்கொண்டு `டிïன்' எதுவும் கம்போஸ் செய்யாமல் விட்டுவிட்டேன். அதனால் அந்த டிïன்தான் அந்தக் காட்சிக்கென்று முடிவாகிவிட்டது.
"இந்த மெட்டுக்கு கவிஞரை வைத்து பாட்டு எழுதச் சொல்லலாமா?'' என்று பாரதியிடம் கேட்டேன். "புதிதாக யாரையாவது வைத்து எழுதலாம்'' என்றார் பாரதி. அதோடு நில்லாமல், "ஏன் அமரனே எழுதட்டுமே'' என்றார்.
அமர் உள்பட எங்கள் எல்லோருக்குமே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே கவிஞராகத் தெரிந்தாரேயன்றி, வேறு யாரையும் கவிஞராகக் கருத முடியவில்லை. `அமரன் எழுதட்டும்' என்று பாரதி சொன்னதற்கு நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அமரன் வேண்டாம் என்று தடுக்கவும்
இல்லை.
நடிகர் சங்கம் நன்றாக நடக்க வேண்டும். இதன் மூலம் நடிகர்-நடிகைகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். முதலில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் லயோலா கல்லூரியில் நடக்கும் என்றார்கள். பின்னர் நடிகர் சங்க வளாகத்துக்கு மாற்றினார்கள். இந்த இடமாற்றம் காரணமாக பலர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.
எனக்கு இந்த பொதுக்குழுவில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் இல்லை. என்னைப் பற்றி ஊழல் புகார் கூறுகிறார்கள். முதலில் ஒரு தொகையை ஊழல் செய்துவிட்டதாக கூறினர். பின்னர் இன்னொரு தொகையை சொன்னார்கள். இப்போது ஒரு தொகையை சொல்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் கணக்கு இருக்கிறது. என் மீது குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே புதிது புதிதாக ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னை நீக்கிவிட்டதாக தீர்மானம் போட்டு இருக்கிறார்கள். அதை சட்டப்படி சந்திப்பேன் என்று ஏற்கனவே சொல்லி விட்டேன். 50, 100 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் ஏதோ குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக இதை செய்கிறார்கள்.
நடிகர் சங்கத்தில் மோதல், அடிதடி, தகராறு என்று கேள்விப்பட்டேன். எனது மனைவி மூலம் இந்த பிரச்சினைகளை தெரிந்து கொண்டேன். நடிகர் சங்கம் என்றால் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நான் தலைவராக இருந்தபோது இது போன்ற பிரச்சினைகள் வந்ததே இல்லை. நல்லது நடப்பதற்காக இயங்க வேண்டிய நடிகர் சங்கத்தில் பிளவும், மோதலும் ஏற்படுவது வேதனை. நடிகர் சங்க ஒற்றுமை சீர்குலைந்து இருப்பது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவர்களிடையே ஏற்கனவே நெருக்கம் இருந்தது. இதனால்தான் மஞ்சுவாரியர் திலீப்பை விட்டு பிரிந்தார் என்று கூறப்பட்டது. ஆனால் திலீப் அளித்த பேட்டியில், “என் மகள் விரும்பியதால்தான் காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டேன்” என்று கூறி இருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மஞ்சுவாரியர், “திலீப், காவ்யாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எங்கள் மகள் மீனாட்சி கட்டாயப்படுத்தினாள் என்று கூறுவதில் உண்மை இல்லை. அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்வதற்காக மகள் மீனாட்சியை பொய் சொல்ல வைத்து விட்டார்கள். திலீப் எப்பொழுதான் நடிப்பார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கமல் தற்போது நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்திற்கு பிறகு மௌலி இயக்கத்தில் நடிக்கப்போவதாகவும், அந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவியது.
சமீபத்தில் கமலை நேரில் சந்தித்த மௌலி, தன்னிடம் இருந்த ஒரு கதையை கமலிடம் சொன்னதாகவும், அவருக்கு அந்த கதை பிடித்துப்போய் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ.வி.எம். நிறுவனர் ‘மெய்யப்பன்’ அவர்கள் பெயரை தலைப்பாக வைக்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த செய்தியை யக்குனர் மௌலி முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கமலை நேரில் சந்தித்து உண்மைதான். அது வெறும் நட்பு ரீதியான சந்திப்புதானே தவிர, படம் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை என்று கூறினார்.
‘சபாஷ் நாயுடு’ படத்திற்கு முன்பே மௌலி, கமலிடம் ஒரு கதையை கூறியிருந்தார். அந்த கதையில் கமல் நடிப்பதற்கு இதுவரை எந்த பதிலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராதிகா ஆப்தே நிர்வாண படங்களில் நடிப்பது பற்றி கலலைப்படுவதே இல்லை. பலமுறை அவருடைய நிர்வாண படங்கள் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த ராதிகா ஆப்தே. “ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி எண்ணிக்கொண்டு எனது படங்களைப்பார்க்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் ராதிகா ஆப்தே நடித்த நிர்வாண காட்சி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ‘பொம்பாய்ரியா’ என்ற படத்துக்காக அவர் நடித்த காட்சி.
இதுபற்றி இந்த படத்தின் இயக்குனர் மைக்கேல் ஈவார்ட் கூறும் போது, “கதைப்படி அவருடைய செல்போனை ஒருவர் திருடி விடுவார். அதை திருடியவனை ராதிகா ஆப்தே தீவிரமாக துரத்திச் செல்வார்.
ஏனென்றால், அதில் அவர் குளிக்கும் காட்சி ஒன்றின் வீடியோ இருக்கும். ஹோலி கொண்டாட்டத்துக்குப்பிறகு உடலில் இருக்கும் வண்ணப் பொடிகளை கழுவுவதற்கு குளித்தபோது எடுத்த வீடியோ அது. இந்த காட்சியில்தான் அவர் தயங்காமல் நடித்து எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.
ஏற்கனவே ஒரு நிர்வாண காட்சி இணையதளத்தில் வெளியான பரபரப்பின் போது தான் இந்த காட்சியை படமாக்கினோம். ராதிகா ஆப்தே கவலைப்படாமல் தைரியமாக நடித்தார். இதை வைத்து நாங்கள் விளம்பரம் தேடவில்லை” என்றார்.
இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. இந்நிலையில், அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை கலிபோர்னியாவில் உள்ள மிகப்பெரிய வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் நடத்தவுள்ளனர். ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களான ‘லைட்ஸ் அவுட்’, ‘கான்ஜுரிங் 2’, ‘பேட்மேன் vs சூப்பர் மேன்’, ‘காட்ஸில்லா’, ‘ஹாரிபாட்டர்’, ‘இன்செப்சன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவின் பங்களிப்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், தற்போது வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் படமாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை விஜய்-அட்லி படம் பெறப்போவதாகவும் கூறப்படுகிறது.
விஜய் - அட்லி இணையும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில்தான் படமாக்கவுள்ளார்களாம். ‘பைரவா’ படத்தின் டப்பிங் முடிந்ததும் விஜய் குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவிருக்கிறார். அவர் திரும்பி வந்தபிறகு இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் கூடிய விரைவில் அறிவிப்பார்கள் என தெரிகிறது.
அந்த வீட்டில் இருந்து நயன நடிகை ஷுட்டிங் கிளம்புவதில் தொடங்கி, படப்பிடிப்பு தளம் மற்றும் திரும்ப வீட்டுக்கு வரும் வரையிலும் சபாரி சூட் அணிந்த சில பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விடாமல் கண்காணித்து வருகிறார்களாம். இவர்களை மீறி யாரும் நயன நடிகையை நெருங்கிவிட முடியாத அளவுக்கு அவர்களின் பாதுகாப்பு வளையம் இருக்கிறதாம்.
இந்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியிருப்பது நயன நடிகையை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படும் இயக்குனர்தான். ஏனென்றால், ஏற்கெனவே நடிகை இரண்டு பேரை காதலித்து கழட்டிவிட்டவர். மறுபடியும் யாருடனும் நடிகை பழகப் போக அது தனக்கு பாதகமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வர் சுந்தரம் படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். வைபவி ஷிந்திலியா, நாகேஷின் பேரன் நாகேஷ் பிஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே விஜய் படமும், விஷால் படமும் இரண்டு முறை பொங்கலுக்கு நேரடியாக மோதியுள்ளது. இந்த முறை மூன்றாவது முறையாக வரும் பொங்கலுக்கும் இவர்கள் படம் போட்டியாக களமிறங்கும் நிலையில், சந்தானமும் படமும் களத்தில் குதித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.








