என் மலர்
இந்நிலையில், இவரிடம் நாயகன் ரஃபியும், அவரது காதலியான நாயகி மீனாட்சியும் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் அந்த மருத்துவமனைக்கு வந்த பிறகு ஆதித்யா மேனன் அடைத்து வைத்துள்ள பல ஜோடிகளில் சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், காணாமல் போன காதல் ஜோடிகளை பாண்டியராஜன் தலைமையிலான போலீஸ் குழு தேட ஆரம்பிக்கிறது. இறுதியில், காதல் ஜோடிகளை அடைத்து வைத்திருக்கும் ஆதித்யா மேனனை சட்டத்தின் முன் நிறுத்தியதா? அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜோடிகளை கொலை செய்த மர்ம நபர் யார்? என்பதை கண்டுபிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.
அறிமுக நாயகன் ரஃபி-க்கு இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். படத்தில் ரொம்பவும் சீரியசாய் வசனமெல்லாம் பேசியிருக்கிறார். இரண்டு நாயகிகளுடனும் டூயட் பாடுகிறார். ஆனால், நடிப்பதற்குதான் ரொம்பவும் திணறியிருக்கிறார். ‘கருப்பசாமி குத்தகைகாரர்’ படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக வந்த மீனாட்சி, இந்த படத்தில் கிளமாரில் வந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கியிருக்கிறார். ஆனால், அவரை அந்த கதாபாத்திரத்தில் ரசிக்கத்தான் முடியவில்லை. மற்றொரு நாயகியான மீரா நந்தன், பிளாஷ்பேக் காட்சியில் மட்டுமே வருகிறார். மற்றவர்களைவிட இவரது நடிப்பு ஓகேதான்.
சைக்கோ வில்லனாக வரும் ஆதித்யா மேனன், படத்தில் ஏனோதானேவென்று நடித்திருக்கிறார். இவரை சரியாக வேலை வாங்கவில்லை என்றே தோன்றுகிறது. காமெடி போலீசாக வரும் பாண்டியராஜன், நெல்லை சிவா, சிஷர் மனோகர் ஆகியோரின் காமெடி பெரிதாக எடுபடவில்லை.
‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பேசாத கண்ணும் பேசுமே’ உள்ளிட்ட காதல் படங்களை கொடுத்த முரளி கிருஷ்ணா, இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் டுவிஸ்டுக்கு மேல் டுவிஸ்டுகள் வைத்துக்கொண்டே போயிருக்கிறார். இன்றைய டிரெண்டுக்கு ஏற்றார்போல் கிரைம் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். ஆனால், இயக்கத்திலும், நடிகர்கள் தேர்விலும், அவர்களை வேலை வாங்கும் விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஜெகதீஷ் விஷ்வத்தின் ஒளிப்பதிவு மிகப்பெரியதாக கைகொடுக்கவில்லை. முரளி கிருஷ்ணாவின் இசையும் படத்தில் சொல்லும்படியாக இல்லை.
மொத்தத்தில் ‘நேர்முகம்’ கோணல்.
மும்பை பன்வேல் பண்ணை வீட்டில் இன்று அவரது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழாவில் சல்மானோடு இணைத்து கிசுகிசுக்கப்பட்ட லுலியா வான்ட்டுர், பிரீத்தி ஜிந்தா, இஷா குப்தா, பிபாஷா பாசு, கரண் சிங் குரோவர் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
’மனிதத்துடன் இருப்போம்’ (Being Human) என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட சாக்லேட் நிற கேக்கை சல்மான் கான் வெட்டும் காட்சியுடன் அவரது பிறந்தநாள் விழாவில் தாங்கள் பங்கேற்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதில் மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்கவிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி அடிபடுகிறது.
ஜோதிகா ஏற்கெனவே விஜய்யுடன் குஷி, திருமலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமந்தா ‘கத்தி’, ‘தெறி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். காஜல் அகர்வால் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர்கள் நடிக்கவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிகாரப்பூர்வமில்லாததாக இருந்தாலும், விரைவில் இதுகுறித்து அறிவிக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நான் நடித்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் படப்பிடிப்பு முடிந்து திரையிடுவதற்கு தயார்நிலையில் உள்ளது. ஆனால், படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருக்கிறது. படம் வெளியாக உதவி செய்யும்படி போலீஸ் கமிஷனரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். அவரும் உதவி செய்வதாக கூறினார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை வேந்தர் மூவிஸ் அதிபர் மதனும், ‘சூப்பர் குட்ஸ்’ படநிறுவன அதிபர் ஆர்.பி.சவுத்ரியும் இணைந்து தயாரித்தனர். பின்னர் வேறொரு பிரச்சினைக்காக மதன் சிறைக்கு போய்விட்டார். அதன்பிறகு ஆர்.பி.சவுத்ரி படத்தை தயாரித்துள்ளார். மதன் சிறைக்கு போய்விட்டதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிக்கலை தீர்த்து வைக்கக்கோரி போலீஸ் உதவியை கேட்டுள்ளோம்’.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் ஆர்.பி.சவுத்ரி, நிருபர்களிடம் கூறியதாவது:-
வேந்தர் மூவிஸ் சார்பில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்கு பூஜை போட்டபோது, அந்த படத்தின் கதை வேறுவிதமாக இருந்தது. தற்போது நாங்கள் தெலுங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘பட்டாசு’ என்ற படத்தை, தமிழில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற தலைப்பில் தயாரித்துள்ளோம். வேந்தர் மூவிஸ் தயாரித்த படம் வேறு. நாங்கள் இப்போது தயாரித்துள்ள படம் வேறு. இரண்டுக்கும் சம்பந்தமில்லை.
‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற தலைப்பை வேந்தர் மூவிஸ் நிறுவனத்திடமிருந்து முறையாக வாங்கிவிட்டோம். வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் அதிபர் மதன் வேறொரு பிரச்சினையில் சிறைக்கு போய்விட்டதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதனிடமிருந்து படம் வெளியாவதற்கு அனுமதி தேவைப்படுகிறது. அந்த அனுமதியை பெற்றுத்தருவதற்கு போலீஸ் உதவியை நாடியிருக்கிறோம். போலீஸ் கமிஷனரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். வேறு பிரச்சினை எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சுராஜ் கூறும்போது, ‘ரசிகர்கள் பணம் கொடுத்து படம் பார்க்க வருகின்றனர். நடிகர்கள் சண்டைபோடவேண்டும், நடிகைகள் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக வரவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கதாநாயகிகள் புடவைக்கட்டிக்கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த வகையில்தான் தமன்னாவை ‘கத்திச்சண்டை’ படத்தில் கவர்ச்சியாக நடிக்க வைத்தேன்.
கவர்ச்சியாக நடித்த நடிகைகள்தான் பெரிய கதாநாயகிகளாக உயர்ந்து இருக்கிறார்கள். ரூ.1 கோடிக்கு மேல் நடிகைகள் சம்பளம் வாங்குகின்றனர். அவர்கள் டைரக்டர் சொல்கிறபடி கவர்ச்சியாக நடிக்கத்தான் வேண்டும். நடிப்புத்திறமையை காட்டுவதற்கு வேறு கதைகளும், டெலிவிஷன் தொடர்களும் இருக்கின்றன. எனது படங்களில் நடிகைகளை கவர்ச்சியாக நடிக்க வைத்துவிடுவேன்’ என்று கூறியிருந்தார்.
இந்த கருத்து, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நயன்தாரா, தமன்னா ஆகியோர் டைரக்டர் சுராஜுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நயன்தாரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
சினிமா துறையைச் சேர்ந்த பொறுப்பான ஒருவர் இப்படி கீழ்த்தனமான கருத்தை தெரிவித்திருக்கிறார். நடிகைகள் பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு சுராஜ் யார்?. பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக கதாநாயகிகள் ஆடைகளை களைந்துவிடுவார்கள் என்று அவர் கருதுகிறாரா?. ஆடைகளை களைபவர்கள் தான் நடிகைகள் என்ற கண்ணோட்டத்தில்தான் அவர் கதாநாயகிகளை பார்க்கிறாரா?. தனது குடும்பத்தில் வேலைக்கு செல்லும் பெண்களைப்பற்றி இதுபோன்று தைரியமாக சொல்லமுடியுமா?. ‘தங்கல், பிங்க்’ போன்ற இந்தி படங்கள் பெண்களின் பெருமையை பேசக்கூடியவைகளாக இந்தகாலத்தில் திரைக்கு வந்துள்ளன. பெண்களை அவமதிக்கும் சுராஜ், எந்த காலக்கட்டத்தை சேர்ந்தவர் என்று புரியவில்லை.
நடிகைகள் கவர்ச்சி உடைகளை கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே அணிகின்றனர். ரசிகர்கள் கவர்ச்சி பொம்மைகளாக நடிகைகளை பார்க்கத்தான் பணம் கொடுத்து தியேட்டருக்கு வருகிறார்கள் என்று எந்த ரசிகர்களை மனதில் வைத்து சொல்கிறார் என்று புரியவில்லை. ஆடைகளை களையவே நடிகைகள் பணம் வாங்கிக்கொண்டு நடிக்கின்றனர் என்று சுராஜ் கூறியதன் மூலம், சினிமாவில் இப்படித்தான் நடக்கிறது என்று எல்லோரும் நடிகைகளைப்பற்றி தவறாக நினைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நானும் வணிக படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். டைரக்டர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ, பணம் கொடுத்தார்கள் என்பதற்காகவோ அப்படி நடிக்கவில்லை. கதைக்கு தேவையாகவும், எனக்கு உடன்பாடாகவும் இருந்தால் மட்டுமே நடித்திருக்கிறேன். நடிகைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.
தமன்னா கூறியதாவது:-
நடிகைகள் பற்றி டைரக்டர் சுராஜ் தெரிவித்த கருத்து, என்னை காயப்படுத்தியுள்ளது. கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர் என்னிடம் மட்டுமின்றி, சினிமா துறையில் உள்ள அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும். நடிகைகளாகிய நாங்கள், ரசிகர்களை சந்தோஷப்படுத்தவே நடிக்கிறோம். அதற்காக எங்களை காட்சி பொம்மைகளாக பார்க்கக்கூடாது.
தென்னிந்திய படங்களில் 11 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். எனக்கு பிடித்த உடைகளை அணிகிறேன். நமது நாட்டின் பெண்களை கேவலமாக பேசுவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஒரு தனிநபர் கருத்துகளை வைத்துக்கொண்டு, சினிமா துறையே இப்படித்தான் என்று நினைக்கவேண்டாம்’ என ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமன்னா கூறினார்.
இதைப்பற்றி அறிந்த சுராஜ் தனது தவறை உணர்ந்து நடிகைகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னை மன்னியுங்கள். செல்வி தமன்னா உள்ளிட்ட அனைத்து கதாநாயகிகளும் என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு யாரை பற்றியும் தவறாக பேசி அவர்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மீண்டும் என்னை மன்னிக்கவும். என்னுடைய வார்த்தைகளை திரும்ப பெறுகிறேன் என்றார்.
“மோட்டார் வாகனங்களை சாலைகளில் ஓட்டுவதற்கு லைசென்ஸ் இருக்கிறது. பொருட்களை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கும் லைசென்ஸ் வழங்குகிறார்கள். இதுபோல் குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் லைசென்ஸ் வழங்க வேண்டும் என்பது எனது கருத்து.
நிறைய குழந்தைகள் ரோட்டில் பிச்சை எடுக்கும் அவல நிலையை பார்க்க முடிகிறது.
பிச்சை எடுக்க வைப்பதற்காகவே குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். இதன் மூலம் குழந்தை தொழிலாளர்கள் பெருகுகின்றனர். குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதற்கு லைசென்ஸ் முறையை கொண்டு வருவது அவசியம். நான் தினமும் ரோட்டோரங்களில் வெயிலில் சுருண்டு விழுந்து கிடக்கும் குழந்தைகளை பார்க்கிறேன்.
அவர்களுக்கு பால் கிடையாது. நல்ல சாப்பாடு கிடையாது. உடுக்க உடை கிடையாது. அவர்களை பார்க்கும்போதெல்லாம் கண்களில் நீர் முட்டுகிறது. தாய்மார்களே குழந்தைகளை தூக்கி வந்து பிச்சை கேட்கிறார்கள். பிச்சை எடுப்பதற்காக வாடகைக்கும் கொடுக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பெண்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து இனிமேல் குழந்தையை பிச்சை எடுக்க அனுமதிக்க கூடாது என்று சொன்னால் கூட திருந்த மாட்டார்கள். இவர்களுக்கு குழந்தைகள் பெற்று வளர்க்க என்ன தகுதி இருக்கிறது. இந்த கொடுமைகளை தடுத்து நிறுத்துவது அவசியம். எனவேதான் லைசென்ஸ் முறை வேண்டும் என்கிறேன்.
குழந்தை பெற்று வளர்க்க தகுதி இருக்கிறதா என்று பார்த்து தகுதி இருப்பவர்களுக்கு மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். குழந்தையை வளர்க்க தகுதி இல்லாதவர்களுக்கு லைசென்ஸ் வழங்க கூடாது. மீறி அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டால் தண்டனை வழங்க வேண்டும்.
நான் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து குழந்தை பெற்றுக்கொள்ள லைசென்ஸ் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினேன். குழந்தையை வளர்க்க தகுதி இல்லாதவர்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளவும் தகுதி இல்லை.”
இவ்வாறு சஞ்சனா கூறினார்.
இவர்கள் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 5-ந்தேதி நடக்கிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 8-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி முடிவடைகிறது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள், 13-ந்தேதி. இறுதி வேட்பாளர் பட்டியல் 18-ந்தேதி வெளியிடப்படும்.
இந்த தேர்தலில் 3 அணிகள் போட்டியிட தயாராகி வருகின்றன. ஒரு அணி சார்பில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார்.
இவரது அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு ஏ.எம்.ரத்னம், ஏ.எல்.அழகப்பன், செயலாளர்கள் பதவிக்கு கேயார், கதிரேசன் பொருளாளர் பதவிக்கு எஸ்.வி.சேகர் அல்லது கமீலா நாசர் போட்டியிடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இன்னொரு அணியில் டி.சிவா, தனஞ்செயன் உள்ளிட்ட சிலர் போட்டியிடுகிறார்கள். மற்றொரு அணியில் தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணனும், செயலாளர்கள் பதவிக்கு மன்னன், சிவசக்தி பாண்டியன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு நடிகை தேவயானியும் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. 21 பேரை கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 3 அணி சார்பிலும் 63 பேர் மோதுகிறார்கள்.
3 அணிகள் சார்பில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மொத்தம் 1,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 1,210 பேர் மட்டுமே ஓட்டுப்போட தகுதி உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.
நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட கடந்த 5 வருடத்துக்குள் சொந்தமாக படங்கள் தயாரித்து இருக்க வேண்டும் என்றும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் சொந்த படத்தை கடந்த 6 மாதத்துக்குள் தணிக்கை செய்தவராக இருக்க வேண்டும் என்றும் சங்க விதிமுறைகள் உள்ளன.
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தங்கல்'. கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வெளியான 3 நாட்களில் சுமார் 100 கோடியைத் தாண்டி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இப்படம் பெரும் வசூலைக் குவித்து வருவதாக இந்தி திரையுலகின் வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும், பண மதிப்பு நீக்கம், புதிய ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு ஆகியவற்றை கடந்து இச்சாதனையை நிகழ்த்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தங்கல் திரைப்படத்திற்கு அரியானா மாநிலத்தில் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கட்டார், “தங்கல் திரைப்படத்திற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருவதை கேள்விபட்ட பிறகு அந்த படத்திற்கு அரியானா மாநிலத்தில் வரிவிலக்கு சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்து உள்ளேன்” என்றார்.
உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி இரவு உயிரிழந்தார்.
மறைந்த ஜெயலலிதா அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். அவரது மறைவை தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது.
இதனையடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா வர வேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். போயஸ் கார்டனில் தினந்தோறும் சந்திப்பு நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் என்று கூறப்படும் சசிகலாவை போயஸ் கார்டனில் நடிகை ஸ்ரீதேவி சந்தித்துள்ளார். நேற்று மாலை இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நடிகர் அஜித் குமாரும் நேற்று மாலை போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி இரவு உயிரிழந்தார்.
மறைந்த ஜெயலலிதா அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். அவரது மறைவை தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது.
இதனையடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா வர வேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், போயஸ் கார்டனில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும், பத்திரிக்கை துறையை சார்ந்தவர்களும், தொண்டர்களும் தினமும் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் போயஸ் கார்டனில் சசிகலாவை நேற்று மாலை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த போது, பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பில் இருந்த அஜித் குமார் அன்று மாலையே சென்னை வந்தார். பின்னர், ஜெயலலிதாவை அடக்கம் செய்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழில் கார்த்திக் -ரம்பா நடித்து பெரும் வெற்றியை எட்டிய படம் "உள்ளத்தை அள்ளித்தா.''
இந்தப் படத்தில் ரம்பா நடித்த கேரக்டரில் முதலில் ரோஜாதான் நடிப்பதாக இருந்தது. அந்த நேரத்தில் பிரபுவுடன் "பரம்பரை'', விஜயகாந்துடன் "தமிழ்ச்செல்வன்'' என்று 2 படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் "உள்ளத்தை அள்ளித்தா'' படத்தில் நடிக்க முடியவில்லை.
ஆனால், இந்த ஏமாற்றத்தை விக்ரமன் இயக்கிய "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'' படம் போக்கிவிட்டது. விக்ரமன் தனது புதிய படத்தின் நாயகி ரோஜா என்று அறிவித்ததும், விக்ரமனின் நட்பு வட்டம் அவரிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டார்கள். "ரோஜா கிளாமர் நடிகை. உங்கள் படத்தின் கதாநாயகியாக நடிக்க அவர் பொருத்தமாக இருக்கமாட்டார்'' என்று கூறினார்கள். ஆனால் விக்ரமன், "என் படத்தின் கதாநாயகி கேரக்டரை ரோஜா அப்படியே பிரதிபலிப்பார்'' என்று அடித்துச் சொல்லிவிட்டார்.
விக்ரமன் கணிப்புப்படியே, ரோஜாவும் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்தார்.
இந்தப்படம் கிராமங்களில் உள்ள தியேட்டர்களில் கூட பிரமாதமாக ஓடியது. தெலுங்கில் வெங்கடேஷ் -சவுந்தர்யா நடிக்க `ரீமேக்' செய்தார்கள். தெலுங்கில் இந்தப்படம் வெற்றிப்பட்டியலில் சேர்ந்தாலும் தமிழ் அளவுக்கு இல்லை.
இந்த வெற்றியில்தான் ரசிகர்களால் ரோஜா ரொம்பவும் கவனிக்கப்பட்டார். ரோஜா எந்தக் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிப்பார் என்ற நம்பிக்கையை "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'' படம் ஏற்படுத்தியது.
வேலுபிரபாகரன் இயக்கிய "கடவுள்'' படத்தில், ரோஜா மேக்கப் எதுவும் போடாமல் நடித்திருந்தார்.
ரஜினியுடன் ரோஜா நடித்த இரண்டாவது படம் "வீரா.''
இந்தப் படத்தில் காமெடி பிரதானமாக இருந்தது. ரோஜாவுடன் இன்னொரு நாயகியாக மீனாவும் நடித்தார். ரஜினிக்கு இரண்டு பேரை ஜோடிகளாகப் போட்டாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை "வீரா'' நிரூபித்தது.
இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம். ரோஜா -மீனா இருவருமே, படத்தில் ஒருவரை ஒருவர் "அக்கா'' என்று அழைத்துக்கொண்டார்கள்!
"வீரா'' படத்தில் ரஜினியுடன் காமெடிக் காட்சியிலும் சிறப்பாக ரோஜா நடித்தார்.
ரஜினியுடன் `உழைப்பாளி' படத்தில் நடித்தபோதே அவருடன் நல்ல நட்பு இருந்தது. `வீரா' படத்தில் இந்த நட்பு புதுப்பிக்கப்பட்டு, நகைச்சுவை காட்சிகளில் இயல்பாக நடித்தார், ரோஜா.
இரண்டு நாயகிகள் நடிக்கும் படம் என்றால் அதில் தனது கேரக்டர் பற்றி, முன்னதாகவே முழுமையாக ரோஜா தெரிந்து கொள்வார். இந்தப் படத்தில் கிராமத்துப் பின்னணியில் வரும் காட்சிகளில் மீனாவும், நகரப் பின்னணியில் ரோஜாவும் என ஜோடிகள் சமமாக இருந்ததால், உற்சாகமாக நடித்தார், ரோஜா.
ரோஜாவின் நூறாவது படம் "பொட்டு அம்மன்.''
சினிமா நட்சத்திரங்களுக்கு நூறாவது படம் என்பது, முக்கியமான மைல் கல். "என்னுடைய நூறாவது படம் பக்திப் படமாக அமைந்ததில் மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்தப்படம் ரசிகர்களை கவரவில்லை. "உழைப்பது நம் கடமை. பலன் தருவது இறைவன் அல்லவா'' என்று கூறுகிறார், ரோஜா.
சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த நேரத்திலேயே, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது ரோஜாவுக்கு. "நதி எங்கே போகிறது'' என்ற தொடரில் நடிக்க கணிசமான சம்பளமும் பெற்றார் ரோஜா. ஆயினும் அந்த தொடரை ரோஜாவினால் தொடர முடியவில்லை. காரணம், சம்பளம் அதிகம் என்பதால் தினமும் ஏராளமான காட்சிகளை எடுத்துக் குவித்தார்கள். இதனால், மன நிறைவு அளிக்கும் வகையில் நடிக்க முடியாது என்று கருதிய ரோஜா, இடையிலேயே விலகிக்கொண்டார்.
அதன் பிறகு வந்த சின்னத்திரை வாய்ப்புகளையும் அவர் ஏற்கவில்லை.
இந்த ஆண்டு வீராட்கோலி ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் அவர் இந்த ஆண்டில் அதிக ரன் எடுத்த இந்திய வீரராக ஜொலித்தார்.
வீராட்கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் தற்போது உத்தரகாண்டில் உள்ளனர். நேற்று அவர்கள் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.புத்தாண்டு வரை அவர் அனுஷ்கா சர்மாவுடன் உத்தரகாண்டில் இருப்பார். அங்கு தான் அவர் காதலியுடன் புத்தாண்டை கொண்டாடுகிறார்.
காதலியுடன் நன்றாக பொழுதை போக்கிய பிறகே அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார். பெங்களூரில் 5-ந்தேதி தொடங்கும் வீரர்களின் பயிற்சி முகாமில் கலந்து கொள்வார்.
வீராட்கோலியின் வருகைக்கு உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி ஹர்ஷ் ராவத் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோலி உத்தரகாண்ட் மாநில சுற்றுலா தூதுவராக கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








