என் மலர்
இந்த ஆண்டு வீராட்கோலி ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் அவர் இந்த ஆண்டில் அதிக ரன் எடுத்த இந்திய வீரராக ஜொலித்தார்.
வீராட்கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் தற்போது உத்தரகாண்டில் உள்ளனர். நேற்று அவர்கள் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.புத்தாண்டு வரை அவர் அனுஷ்கா சர்மாவுடன் உத்தரகாண்டில் இருப்பார். அங்கு தான் அவர் காதலியுடன் புத்தாண்டை கொண்டாடுகிறார்.
காதலியுடன் நன்றாக பொழுதை போக்கிய பிறகே அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார். பெங்களூரில் 5-ந்தேதி தொடங்கும் வீரர்களின் பயிற்சி முகாமில் கலந்து கொள்வார்.
வீராட்கோலியின் வருகைக்கு உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி ஹர்ஷ் ராவத் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோலி உத்தரகாண்ட் மாநில சுற்றுலா தூதுவராக கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ மதம், இனம் அனைத்தையும் கடந்து உலக மக்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகை கிறிஸ்துமஸ். எப்போதும் நான் கிறிஸ்துமஸ் பண்டிகையை எனது குடும்பத்தினருடன் தான் கொண்டாடுவேன். கடந்த ஆண்டு என் தந்தை மருத்துவமனையில் இருந்தார். எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையை டாக்டர்கள் நர்சுகளுடன் கொண்டாடினோம். இந்த ஆண்டு கொச்சியில் உள்ள வீட்டில் உறவினர்களுடன் கொண்டாடினேன்.
என் கை நிறைய படங்கள் உள்ளன. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னைப்பற்றி நான் நிறைய தெரிந்து கொண்டிருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படும் போதும், மனதளவிலும் எவ்வளவு வலிமை கொண்டவள் என்பதை இப்போது புரிந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் ரசித்து வாழ விரும்புகிறேன்.
திருமணமாகி விவாகரத்தாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்போது மன வருத்தம் அதிகமாக இருந்தது. இப்போது விஜயும், நானும் அவரவர் வழியில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்”.
“ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய கூடிய படம் என்கின்ற அங்கீகாரத்தை ரசிகர்கள் ஒரு திரைப்படத்துக்கு வழங்க வைப்பது ‘யு’ சான்றிதழ் தான். அதை பெற்றுஇருக்கிறோம். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் ஒரு திருவிழா, பொங்கல். அந்த நல்ல நாளில் அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் புரியாத புதிர் படத்தை ஜனவரி 13-ந்தேதி வெளியிட நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்” என்றார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன், தெலுங்கானா மாநில துணை முதல் மந்திரி முஹம்மது மஹ்மூத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இவ்விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கப்பட்டது.

இந்த கவுரவத்துக்கு நன்றி தெரிவித்து பேசிய ஷாருக் கான், ‘ஐதராபாத் எனது தாயார் பிறந்த இடம் என்பதால் இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் இந்த பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்திருப்பார்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமை விருந்தினராக பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்க இயலாத காரணத்தால், கடைசி நேரத்தில் அந்த நிகழ்ச்சி நிரல் ரத்து செய்யப்பட்டது.
நாகசைதன்யா- சமந்தா திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இவர்கள் இருவரும் புதிய படங்களில் நடித்து வருகிறார்கள். எனவே எப்போது திருமணம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இப்போது இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வருகிற ஜனவரி மாதம் 29-ந்தேதி நடைபெற இருக்கிறது.
இதை குடும்பத்தினர், உறவினர்களுடன் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் பட உலகின் முன்னணி நாயகி, அதிக சம்பளம் வாங்கும் நடிகை, இவர் படத்தில் நடித்தாலே அதற்கு தனி மவுசு என்று பல பரிமாணங்களை பெற்றிருக்கிறார்.
ஹரி இயக்கத்தில் சரத்குமார் ஜோடியாக ‘அய்யா’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நயன்தாரா, அடுத்து ரஜினி ஜோடியாக ‘சந்திரமுகி’ படத்தில் நடித்தார்.
முதலில் சிம்பு, அடுத்து பிரபுதேவா என்று காதலில் விழுந்தார். இதனால் சினிமாவில் இருந்து சிறிது விலகினார். என்றாலும் காதலை கடந்து மீண்டும் சினிமாவில் தீவிரம் காட்டினார். இவரது காதலும் தனிப்பட்ட வாழ்க்கையும் திரையுலக பயணத்தில் எந்த வித தடையையும் ஏற்படுத்தவில்லை.
சினிமாவில் நயன்தாராவின் இரண்டாவது பயணம் மிகவும் வேகமாக அமைந்துள்ளது. சமீபத்தில் இவர் நடித்து திரைக்கு வந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.
இதனால் நயன்தாராவின் மார்க்கெட்டும், சம்பளமும் பலமடங்கு உயர்ந்திருக்கிறது. நாயகியை மையப்படுத்தும் படங்களில் நடிக்க விரும்புகிறார். அது போன்ற படங்களே இவருக்கு அமைந்து வருகின்றன.
காதலில் விழுந்த பல நடிகைகளின் திரையுலக பயணம் அத்துடன் முடிவடைந்திருக்கிறது. ஆனால் நயன்தாரா தடைகளை தாண்டி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார். இப்போது இயக்குனர் விக்னேஷ்சிவனை திருமணம் செய்ய தயாராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. என்றாலும் நயன்தாராவுக்கு இதனால் சினிமா உலகில் எந்த பாதிப்பும் இல்லை. அவரது திரைப்பயணம் இனிதாகவே தொடர்கிறது.
அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“எனக்கு திருமணம் எப்போது என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். மாப்பிள்ளை முடிவாகி விட்டது என்றும் அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர்தான் மாப்பிள்ளை என்றும் வதந்தி பரவி இருக்கிறது.
என்னைப்பொறுத்தவரை திருமணத்துக்கு நான் தயாராக இருந்தாலும், அதற்கான நேரம் அமைவது முக்கியம். தற்போது கைநிறைய படங்கள் இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். கடந்த வருடம் எனக்கு நல்ல படங்கள் அமைந்தன. பாகுபலி படத்தில் எனது கதாபாத்திரம் பேசப்பட்டது. இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டி நடித்தேன். ருத்ரமாதேவி படமும் சிறப்பாக அமைந்தது.
இந்த வருடம் நான் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இது வருத்தமாக இருந்தாலும் அடுத்த வருடம் திரைக்கு வரப்போகும் பாகுபலி இரண்டாம் பாகம். சி-3, ஓம்நமோ வெங்கடேசாய, பாக்மதி ஆகிய படங்களை நினைத்து மகிழ்ச்சி அடைக்கிறேன். இந்த 3 படங்களும் எனது திரையுலக வாழ்க்கையில் முக்கிய படங்களாக பேசப்படும்.
பாகுபலி இரண்டாம் பாகத்தில் நான் நடித்துள்ள தேவசேனா கதாபாத்திரம் புதுமையாக இருக்கும். ஓம்நமோ வெங்கடேசாய பக்தி படமாக தயாராகி இருக்கிறது. இந்த படத்திலும் என்னை வித்தியாசமான தோற்றத்தில் பார்க்கலாம்.”
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
காதல் அனுபவங்கள் பற்றி ரோஜா கூறியதாவது:-
"தெலுங்கில் மற்ற டைரக்டர்களுடன் பணியாற்றியதற்கும், செல்வாவுடன் பணியாற்றியதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் தெரிந்தது. யாராவது நடிகைகள் கேமிரா முன் நடிப்பதற்காக நின்று கொண்டிருந்தால், கேமிரா முன்னால் செல்வா வரமாட்டார். அத்தனை கூச்ச சுபாவம். கொஞ்சம் தூரத்தில் இருந்தபடியே, காட்சிகளை விவரிப்பார். எப்படி நடித்தால் சரியாக இருக்கும் என்று விளக்குவார்.
செல்வாவின் இந்தப் பண்பு என்னைக் கவர்ந்தது. இதுவே அவர் மீது எனக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போதுகூட, `காதல்' ஏற்பட்டுவிடவில்லை'' என்றார், ரோஜா.
ரோஜா பற்றி அவரது அம்மாவிடமும், அண்ணனிடமும் அக்கறையாக பேசி வந்திருக்கிறார் செல்வமணி.
இதனால், அவர்கள் இருவருக்கும் செல்வமணியை ரொம்பவே பிடித்துவிட்டது. `அம்மாவுக்கு செல்வான்னா உயிர்' என்று ரோஜாவே சொல்லும் அளவுக்கு ரோஜாவின் தாயாரிடம் நற்பெயர் பெற்றார், செல்வமணி.
காதலை செல்வமணி வெளிப்படுத்தியது பற்றி ரோஜா கூறுகிறார்: "செல்வா என்னிடம் எப்போதும் போலவே பழகினார். ஆனால் அம்மாவிடம் என் மீதான அவரது தனிப்பட்ட அக்கறையை வெளிப்படுத்தி வந்தார். அவ்வப்போது ஒரு தாய்க்கு உரிய பரிவுடன் என் மீதான அவரது அக்கறையையும் தாண்டிய பிரியம் அம்மாவுக்கு தெரியவர, `நம் மகளுக்கேற்றவர் இவரே' என்ற முடிவுக்கு அம்மா வந்துவிட்டார். இது பற்றி அண்ணன்களிடமும் அம்மா கூற, அண்ணன்கள் தரப்பிலும் செல்வாவின் விருப்பத்துக்கு தடையில்லை.
எங்கள் `ரெட்டி' வம்சத்தில், வேறு ஜாதியில் பெண்ணோ, மாப்பிள்ளையோ பெரும்பாலும் எடுக்கமாட்டார்கள். செல்வா முதலியார் வகுப்பு. கனிவான அணுகுமுறையாலும், பண்பாலும் ஜாதியை மீறி எங்களைக் கவர்ந்துவிட்டார், செல்வா.
ராஜமுந்திரியில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். அன்றைக்கு எனது பிறந்த நாளும்கூட. அங்கே வந்த செல்வா, என்னை மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்.
"உன்னை நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இதில் உனக்கும் சம்மதமானால் நான் காத்திருக்கிறேன். நம் திருமணம் உடனடியாக நடந்துவிடவேண்டும் என்பதில்லை. நீ இப்போது பிசியான ஆர்ட்டிஸ்ட். உன் ஆசை தீர நடி. எப்போது `போதும்' என்று தோன்றுகிறதோ, அப்போது நாம் திருமணம் செய்து கொள்வோம்'' என்றார்.
அம்மா மூலம் செல்வாவின் விருப்பம் என் காதுக்கும் ஏற்கனவே வந்திருந்தது. அதுபற்றி எந்த முடிவும் எடுக்காமல் இருந்தபோது, செல்வா இப்படி சொல்ல, `அடடா! எப்படிப்பட்ட மனிதர் இவர்!' என்று எனக்குத் தோன்றியது. நானும் சம்மதம் தெரிவித்து விட்டேன்.
செல்வா எனக்காக 13 வருஷம் காத்திருந்து கைபிடித்தார். நிஜமாகவே இப்படி ஒரு காதல் கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்'' என்று ரோஜா கூறினார்.
இந்த காத்திருந்த காதலிலும் ரோஜாவுக்கு அவ்வப்போது அட்வைசெல்லாம் கொடுத்து `பூப்போல' பார்த்துக் கொண்டிருக்கிறார், செல்வமணி.
ராத்திரி பகல்னு தொடர்ந்து தூங்காம ரெஸ்ட்டே இல்லாம நடிச்சா கண்ணுக்கு கீழே கருவளையம் வந்திடும். அதனால் `ஓய்வு' எடுக்கிற நேரம் அதிகமா இருக்கணும்' என்கிற மாதிரி செல்வமணி அவ்வப்போது ஆலோசனை கொடுத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்.
காலச்சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி சுழல்வதில்லை. ரோஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நூறு படங்களைத் தாண்டிவிட்டார்.
ரோஜா புகழின் உச்சியில் இருந்தாலும், செல்வமணி இயக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "குற்றப்பத்திரிகை'' படம் ரிலீசாகாமல் போனதும் செல்வமணியை கவலைக்குள்ளாக்கி விட்டது (முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு பின்னணியில் உருவான படம் என்பதால், அப்போது தடை செய்யப்பட்ட இந்த படம், பல வருடங்கள் கழித்து சமீபத்தில்தான் ரிலீசானது).
இந்த நேரத்தில் ரோஜாவிடம் பலரும் பேசி அவர் மனதை கலைக்கப் பார்த்திருக்கிறார்கள். அது காதலில் உறுதியாயிருந்த ரோஜாவின் மனதை எந்தவிதத்திலும் கலைக்கவில்லை. காதலிக்கத் தொடங்கி 13 வருடங்கள் முடிந்த நிலையில் ரோஜா `திருமதி செல்வமணி' ஆகிவிட்டார்.
அப்போது ஆந்திராவின் முதல்- மந்திரியாக இருந்த சந்திரபாபு நாயுடு இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த காதல் தம்பதிகளுக்கு பெண் ஒன்றும், ஆண் ஒன்றுமாய் இரண்டு குழந்தைகள்.
ஆரம்பத்தில் கிளாமர் கேரக்டர்களில் அதிகம் நடித்து வந்த ரோஜாவுக்கு ரஜினியுடன் `உழைப்பாளி' படத்தில் நடிக்க வந்தபோது ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டது.
ரோஜா ஏராளமான படங்களில் இரவு -பகலாக நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஐதராபாத்துக்கும், சென்னைக்குமாக அடிக்கடி விமானத்தில் பறந்தபடி இருந்தார்.
அப்போதுதான் ரஜினிக்கு ஜோடியாக "உழைப்பாளி'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
முதல் நாள் படப்பிடிப்பில், "ரஜினி பெரிய சூப்பர் ஸ்டார். அவருடன் நடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று நிருபர்கள் கேட்கப்போக, இதில் தனக்கு எந்தவித பீலிங்கும் இருப்பதாக தெரியவில்லை என்கிற ரீதியில் ரோஜா பதில் சொன்னார்.
இந்த பதிலால், ரஜினி ரசிகர்கள் வெடித்துவிட்டார்கள். `எங்கள் சூப்பர் ஸ்டார் உங்களுக்கு அவ்வளவு சாதாரணமானவராகத் தெரிகிறாரா?' என்கிற மாதிரி கேள்விக்கணைகளை வீசினார்கள்.
ஆனால், "அவர் ஒரு நடிகை. என்னுடன் நடிப்பது இதுதான் முதல் தடவை. ஒரு நடிகை என்ற கண்ணோட்டத்தில், இது சினிமா என்ற கண்ணோட்டத்தில் அவர் சொன்ன பதில் எப்படி தவறாக இருக்க முடியும்?'' என்று கூறி, ரஜினிதான் ரசிகர்களை சமாளித்திருக்கிறார்.
இதுபற்றி ரோஜா கூறும்போது, "அப்போது நான் எவ்வளவு வெகுளியாக இருந்திருக்கிறேன், பாருங்கள்!'' என்று சிரித்தார்.
இந்த படத்தை வெளியிடுவது குறித்து மலர் கூறும்போது, நாங்கள் திரையுலகில் அடியெடுத்து வைக்க விரும்பினோம். தரமான எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும்படியான படங்களையே வாங்கி வெளியிட நினைத்தோம். 'சிங்கம் 3' படத்தை முதலில் சென்னை மாநகரம் வெளியிட வாங்கினோம். முதல் படமே சூர்யா நடித்த ஹரி இயக்கிய பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள படமாக அமைந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்து "துருவங்கள் பதினாறு ' படத்தைப் பார்த்தோம். புதிய இயக்குநர், புதிய படக்குழு என்று ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் தான் படத்தைப் பார்த்தோம். ஆனால் படத்தைப் பார்த்த பிறகு எங்கள் அபிப்ராயம் முற்றிலும் மாறி விட்டது.
அந்த அளவுக்கு புத்திசாலித்தனமான திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள் என்று அசத்தியிருந்தார் இயக்குநர் கார்த்திக் நரேன். இப்படம் எல்லாரையும் கவரும் என்கிற நம்பிக்கை வந்து விட்டது . வாங்கி வெளியிடுவது என்று முடிவு செய்தோம். படத்தை வாங்கினோம். டிசம்பர் 29-ல் உலகெங்கும் வெளியிடுகிறோம். ட்ரீம் பேக்டரி எங்களுடன் இணைந்துள்ளது எங்களுக்கு மேலும் ஊக்கமாகவும் பலமாகவும் அமைந்திருக்கிறது.
இவ்வாறு மலர் கூறினார்.
ஆர்.கே.சுரேஷ் தன்னை தயாரிப்பாளராக மட்டுமில்லாமல், நடிகராகவும் கோலிவுட்டில் தனது பெயரை நிலைநிறுத்தியுள்ளார். இந்நிலையில், ஸ்டுடியோ 9 மியூசிக் என்ற மியூசிக் நிறுவனத்தை ஆர்.கே.சுரேஷ் தொடங்கியுள்ளார். இதன்மூலம் தரமான இசைப் பாடல்களை வெளியிடுவது எனவும் முடிவு செய்துள்ளார்.
இந்நிறுவனத்தின் சார்பில் முதன்முதலாக ‘அட்டு’ எனும் படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளார். வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை அருமையாக படம்பிடித்துள்ள அட்டு படத்தை ரத்தன் லிங்கா என்பவர் இயக்கியிருக்கிறார். விருவிருப்பாகவும், அனைத்து விதமான ரசிகர்களை கவரும்படி இப்படம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இசை மற்றும் வெளியீட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நடிகருக்கு ஆக்ஷன் ஒத்துவராததால் ரசிகர்கள் அந்த படத்தை மிகப்பெரிய பிளாப் ஆக்கினார்கள். இந்நிலையில், அடுத்ததாக உதயமானவர் மீண்டும் ஆக்ஷனில் களமிறங்க உள்ளாராம். முதல் படத்தில் எப்போதும்போல் நடித்த உதயமானவர், இந்த படத்தில் ஆக்ஷனுக்காக ஒரு புது முயற்சியை செய்யவிருக்கிறாராம்.
அது என்னவென்றால், தனது பாடி லாங்குவேஜில் சில மாற்றங்களை செய்து நடிக்கவிருக்கிறாராம். இந்த புதுமுயற்சி நடிகருக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஐதராபாத் நகரில் உள்ள மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தில் பயின்ற 2,885 மாணவர்களுக்கும், தொலைதூர கல்வி மூலம் பயின்ற 44,235 பேருக்கும், முனைவர் பட்டத்துக்கான ஆய்வுகளை செய்துவந்த 276 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன், தெலுங்கானா மாநில துணை முதல் மந்திரி முஹம்மது மஹ்மூத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும் இவ்விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கப்படுகிறது.
உருது மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டமைக்காக ரேக்தா அமைப்பின் நிறுவனரான ராஜிவ் சரஃப் என்பவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.








