search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    விரைவில் இந்தியா வரும் ஸ்கோடா ஆக்டேவியா RS245
    X

    விரைவில் இந்தியா வரும் ஸ்கோடா ஆக்டேவியா RS245

    • ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா கார் புது வடிவில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இதில் உள்ள 1.4 லிட்டர் TSI என்ஜின் மற்றும் இ-மோட்டார் 245 பிஎஸ் பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    ஸ்கோடா நிருவனத்தின் ஆக்டேவியா RS மாடல் மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதிக சக்திவாய்ந்த RS மாடல் முற்றுலும் புது தோற்றத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்பை போன்றே இந்த கார் முழுமையாக இறக்குமதி செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த காரின் விலை சற்று அதிகமாகவே இருக்கும்.

    முன்னதாக ஆக்டேவியா RS சீரிஸ் பெட்ரோல் என்ஜினுடன் மட்டும் கிடைத்தது. தற்போது இந்தியாவில் முதல் முறையாக ஆக்டேவியா RS மாடல் பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இந்த காரிலும் 1.4 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இவை இணைந்து 245 பிஎஸ் பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    புதிய ஆக்டேவியா பெட்ரோல் ஹைப்ரிட் கார் வடிவில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இந்த காரில் 13 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பிக்கப் பெருமளவு சரிவடைந்துள்ளது.

    ஸ்கோடா ஆக்டேவியா RS245 மாடல் தற்போதைய மாடலை விட அதிக விலை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய ஆக்டேவியா மாடலின் விலை ரூ. 36 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    Next Story
    ×