search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    முற்றிலும் புதிய ஆல்டோ K10 இந்திய முன்பதிவு துவக்கம் - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    முற்றிலும் புதிய ஆல்டோ K10 இந்திய முன்பதிவு துவக்கம் - வெளியீடு எப்போ தெரியுமா?

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தலைமுறை ஆல்டோ K10 காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்த மாடல் விரைவில் மாருதி சுசுகி அரினா விற்பனை மையங்களை வந்தடையும் என எதிர்பார்க்கலாம்.

    மாருதி சுசுகி நிறுவனம் புதிய தலைமுறை ஆல்டோ K10 மாடலின் முதல் படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. முற்றிலும் புதிய மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடல் அதிக மாற்றங்களுடன் புது தோற்றம் பெற்று இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது.

    ஆல்டோ K10 ஹேச்பேக் மாடலுக்கான முன்பதிவை மாருதி சுசுகி நிறுவனம் துவங்கி விட்டது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். புதிய தலைமுறை மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடலின் விற்பனை ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்க இருக்கிறது. விரைவில் இந்த கார் நாடு முழுக்க செயல்பட்டு வரும் மாருதி சுசுகி அரினா விற்பனை மையங்களை வந்தடையும்.


    "43 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிக வாடிக்கையாளர்களுடன் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் கார் பிராண்டாக ஆல்டோ இருக்கிறது. 22 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க நிறுவனத்தின் ஆல்டோ கார் பெருமை, நம்பிக்கை மற்றும் சார்ந்திருத்தலின் அடையாளமாக மாறி இருக்கிறது. சுசுகி நிறுவனத்தின் வெற்றிகர வாகனமாக ஆல்டோ இருக்கிறது."

    "முற்றிலும் புதிய ஆல்டோ K10 புதிய தலைமுறை தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள் நிறைந்த ஹேச்பேக் மாடலாக இருக்கும். ஆல்டோ 800 உடன் சேர்ந்து முற்றிலும் புதிய ஆல்டோ K10 மாடல் இந்திய வாடிக்கையாளர்களில் பலருக்கும் மகிழ்ச்சி மற்றும் பெருமையை சேர்க்கும் என நம்புகிறோம்," என்று மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு மூத்த நிர்வாக அதிகாரி சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×