என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இது புதுசு
சர்வதேச சந்தையில் அறிமுகமான கியா EV5 கான்செப்ட்
- கியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் ஏற்கனவே அறிமுகமான EV9 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது.
- கியா EV5 கான்செப்ட் மாடலில் சூரிய தகடுகளாக செயல்படும் ஃபுல் லென்த் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.
கியா EV9 கான்செப்ட்-ஐ தொடர்ந்து கியா நிறுவனம் தனது மூன்றாவது எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. கியா EV5 என அழைக்கப்படும் புதிய கான்செப்ட் மாடல் ஃபிளாக்ஷிப் EV9 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய EV5 மாடலும் EV9 போன்ற டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய EV5 கான்செப்ட் மாடலின் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது சீனாவில் இந்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்றும் சர்வதேச சந்தையில் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. EV5 மாடல் டிஜிட்டல் டைகர் ஃபேஸ் மற்றும் க்ளோஸ்டு-ஆஃப் முன்புறம், ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப் கொண்டிருக்கிறது.
பக்கவாட்டில் EV5 மாடலில் 21 இன்ச் ஏரோடைனமிக் வீல்கள், ஃபிளஷ் ஃபிட் டோர் ஹேண்டில்கள், தடிமனான பிளாஸ்டிக் கிலாடிங், கிரீஸ்களை கொண்டுள்ளது. பின்புறம் இந்த கார் EV9-ஐ விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. EV5 மாடலில் லோ-செட் எல்இடி டெயில் லேம்ப்கள், பம்ப்பரில் பெரிய ஸ்கிட் பிளேட் மற்றும் ஸ்பாயிலர் இடம்பெற்று இருக்கிறது.
உள்புறம் சதுரங்க வடிவம் கொண்ட ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது. கியா EV5 மாடலில் சுழலும் வகையான இருக்கைகள், ரியர் ஹிஞ்ச் டோர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் உள்ள ஃபுல் லென்த் பானரோமிக் சன்ரூஃப் சூரிய தகடு போன்று செயல்படுகிறது.
இந்திய சந்தையில் கியா நிறுவனம் EV6 மாடலை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில் EV5 மற்றும் EV9 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்