search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    டாடா சியாரா இ.வி.
    X
    டாடா சியாரா இ.வி.

    எலெக்ட்ரிக் திறனுடன் களமிறங்கும் டாடா சியாரா

    டாடா சியாரா மாடல் முழுமையான எலெக்ட்ரிக் திறன் கொண்டு உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சியாரா மாடலை மீண்டும் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இம்முறை இந்த மாடல் முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாக அறிமுகமாகிறது. புதிய சியாரா இ.வி. மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.

    முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் சியாரா மாடல் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் ஐ.சி. மற்றும் இ.வி. வெர்ஷன்களில் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், புதிய மாடல் முழுமையான எலெக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

     டாடா சியாரா இ.வி.

    இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'பார்ன் எலெக்ட்ரிக்' பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இந்த பிளாட்பார்ம் எதிர்கால டாடா எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் பயன்படுத்தப்பட இருக்கிறது. தற்போதைய நெக்சான் மற்றும் டிகோர் மாடல்கள் ஐ.சி. என்ஜின் கார்களின் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    புதிய எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்ம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனத்திற்கு தேவையான அம்சங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது. இதில் பேட்டரி பேக் பிளேஸ்மெண்ட், எலெக்ட்ரிக் மோட்டார் ஹவுசிங் மற்றும் இதர பாகங்கள் இடம்பெறுகிறது.
    Next Story
    ×