என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
டாடா பன்ச் இ.வி. இந்திய வெளியீட்டு விவரம்
Byமாலை மலர்20 Oct 2021 8:21 AM GMT (Updated: 20 Oct 2021 8:21 AM GMT)
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் பயணிகள் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் 71 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. மாடல் சிப்டிரான் தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கிறது.
இதுவரை இந்திய சந்தையில் நெக்சான் இ.வி. மாடல் 10 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. சமீப காலங்களில் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர மேம்பட்ட டிகோர் மாடலை சிப்டிரான் தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்தது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலும் எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம். இதுவும் சிப்டிரான் தொழில்நுட்பத்திலேயே உருவாகும் என கூறப்படுகிறது.
2026 நிதியாண்டு வாக்கில் பத்து புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X