என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
டாடா பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. இந்தியாவில் அறிமுகம்
Byமாலை மலர்4 Oct 2021 7:12 AM GMT (Updated: 4 Oct 2021 7:12 AM GMT)
டாடா நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வருகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பன்ச் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. டாடா பன்ச் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். புதிய பன்ச் மாடல் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதன் விலை விவரங்கள் பண்டிகை காலக்கட்டத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா பன்ச் மாடல் நெக்சான் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படலாம் என தெரிகிறது.
புதிய டாடா பன்ச் மாடலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 5 ஸ்பீடு ஏ.எம்.டி. யூனிட் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X