என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
முற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் பென்ட்லி
Byமாலை மலர்9 Nov 2020 10:11 AM GMT (Updated: 9 Nov 2020 10:11 AM GMT)
பென்ட்லி நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டும் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பென்ட்லி நிறுவனம் பியாண்ட்100 திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பென்ட்லி நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள தனது கிரீவ் ஆலை தற்சமயம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 75 சதவீதம் வரை குறைக்க இருக்கிறது.
பியாண்ட்100 திட்டத்தை நிறைவேற்றி உலகின் முன்னணி ஆடம்பர கார் நிறுவனம் என்ற பெருமையை எட்டுவோம் என பென்ட்லி நிறுவனத்தை சேர்ந்த அட்ரியன் ஹால்மார்க் தெரிவித்தார்.
மேலும் 2030-க்குள் 100 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் 2021 வாக்கில் பெண்ட்யகா ஹைப்ரிட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
2025 வாக்கில் பென்ட்லி தனது முழுமையான எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஹை-ரைடிங் கிராஸ்ஒவர் செடான் மாடல் ஆகும். இது வழக்கமான எஸ்யுவி மற்றும் வழக்கமான கார் மாடலாக இருக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X