என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
புதிய ஹோண்டா மாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Byமாலை மலர்16 Sep 2020 12:48 PM GMT (Updated: 16 Sep 2020 12:48 PM GMT)
ஹோண்டா நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.
வெளியீட்டிற்கு முன் புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை ஹோண்டா வெளியிட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் பிரீமியம் மாடலாக இருக்கும் என்றும் இது 300 சிசி பிரிவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த மாடல் பிங்விங் விற்பனையகங்களின் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி புதிய மோட்டார்சைக்கிள் 300 முதல் 500 சிசி பிரிவில் குரூயிசர் மாடலாக இருக்கும் என தெரிகிறது.
இது ராயல் என்ஃபீல்டு மற்றும் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஹோண்டா ரிபெல் 300 மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X