என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக புது கூட்டணி அமைத்த மஹிந்திரா
Byமாலை மலர்28 Aug 2020 10:16 AM GMT (Updated: 28 Aug 2020 10:16 AM GMT)
மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக புதிய கூட்டணி ஒன்றை அமைத்து இருக்கிறது.
மஹிந்திரா மற்றும் இஸ்ரேலை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஆர்இஇ ஆட்டோடமோட்டிவ் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி இரு நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி பணிகளை மேற்கொள்ள இருக்கின்றன.
ஆர்இஇ ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்ம் மற்றும் தொழில்நுட்பங்களை மஹிந்திரா பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது. இந்த நிறுவனம் பவர்டிரெயின், சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீரிங் உபகரணங்களை ஒருங்கிணைக்க புது கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது.
இதுபோன்ற புதுவித கட்டமைப்பை கொண்டு வர்த்தக ரீதியிலான வாகனங்களை உருவாக்க முடியும். அந்த வகையில் இரு நிறுவனங்கள் கூட்டணியில் வர்த்தக ரீதியிலான எலெக்ட்ரிக் வாகனம் உற்பத்தி செய்யப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மேலும் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X