என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
லேண்ட் ரோவர் டிஃபென்டர் 90 வெளியீட்டு திட்டத்தில் திடீர் மாற்றம்
Byமாலை மலர்28 Jun 2020 6:15 AM GMT (Updated: 27 Jun 2020 1:30 PM GMT)
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிஃபென்டர் மாடல் வெளியீட்டு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபென்டர் ஆஃப் ரோடர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 2019 பிரான்க்ப்ரூட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
சந்தையில் அறிமுகமானது முதல் புதிய கார் விலை அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகின் பல்வேறு சந்தைகளில் இந்த கார் வெளியிடப்பட்டது. பின் கொரோனா வைரஸ் பாதிப்பு குறுக்கிட லேண்ட் ரோவர் நிறுவனம் தனது புதிய வாகனத்தை வெளியிடும் திட்டங்களை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மூன்று கதவுகள் கொண்ட டிஃபென்டர் மாடலின் முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மூத்த நிதி அலுவலர் அட்ரியன் மார்டெல் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் உற்பத்தி, விற்பனை என அனைத்து பணிகளையும் முழுமையாக இடையூறை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், தற்போதைய காலக்கட்டத்திலும் புதிய டிஃபென்டர் மாடலை வாங்க சுமார் 21 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக மார்டெல் தெரிவித்து இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X