என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்

X
அப்ரிலியாவின் 150சிசி மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரம்
By
மாலை மலர்16 May 2019 9:35 AM GMT (Updated: 16 May 2019 9:35 AM GMT)

பியாஜியோ நிறுவனம் தனது அப்ரிலியா 150 சிசி மோட்டார்சைக்கிள்களை ஏற்கனவே அறிமுகம் செய்து விட்ட நிலையில், இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
இத்தாலியை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான பியாஜியோ இந்திய சந்தையில் 150சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த 18 மாதங்களுக்குள் பியாஜியோ அப்ரிலியா 150சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.
இந்திய சந்தைக்கென பிரத்யேக 150சிசி ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பியாஜியோ நிறுவன நிர்வாக இயக்குனர் டெய்கோ கிராஃபி தெரிவித்தார். இந்த அப்ரிலியா ஸ்கூட்டர் 150சிசி - 200சிசியில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 150சிசி மோட்டார்சைக்கிள் பற்றியும் அவர் தகவல் வழங்கி இருக்கிறார்.
"அப்ரிலியா போன்ற பிராண்டு இருக்கும் போது மோட்டார்சைக்கிள் சந்தையில் விளையாடாமல் இருக்க முடியாது. இதன் மூலம் எங்களது மோட்டார்சைக்கிள் பிரிவில் புதிய வாகனங்களை சேர்க்க முடியும். இதனால் அப்ரிலியாவில் முதலீடு செய்வது அவசியமாகும்" என அவர் தெரிவித்தார்.

2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் பியாஜியோ அப்ரிலியா ஆர்.எஸ். 150 மற்றும் அப்ரிலியா டியோனோ 150 போன்ற மாடல்களை அறிமுகம் செய்தது. இவை சந்தையில் நிலவும் போட்டியை புரிந்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக டெய்கோ கிராஃபி தெரிவித்தார்.
அப்ரிலியா ஆர்.எஸ். 150 மற்றும் அப்ரிலியா டியோனோ 150 மாடல்கள் அலுமினியம் பெரிமீட்டர் ஃபிரேமில் உருவாக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 150சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, 4-வால்வ், ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 18 பி.ஹெச்.பி. பவர் @10,000 ஆர்.பி.எம். மற்றும் 14 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
