என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கார்
500 கிமீ ரேன்ஜ் கொண்ட ஓலா எலெக்ட்ரிக் கார் - வெளியீடு எப்போ தெரியுமா?
- ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கி வருவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி விட்டது.
- மேலும் இந்த எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவலையும் ஓலா அறிவித்து இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஆன்லைன் நிகழ்ச்சி மூலம் ஓலா S1 மாடலுக்கான முன்பதிவுகளை நேற்று (ஆகஸ்ட் 15) துவங்கி இருந்தது. மேலும் எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் அறிவித்து இருக்கிறது. இந்த கார் இந்திய சந்தையில் அதிவேகமான கார் மாடலாக இருக்கும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார்.
அந்த வகையில் ஓலா எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை நான்கே நொடிகளில் எட்டிவிடும் என்றும் இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் உருவாக்கப்பட்டதிலேயே தலைசிறந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இது இருக்கும் என அவர் தெரிவித்தார். இந்த கார் ஆல் கிளாஸ் ரூஃப் மற்றும் சிறப்பான டிராக் கோ-எபிஷியண்ட் வழங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.
இந்த கார் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சொந்த மூவ் ஓஎஸ் கொண்டிருக்கும். இத்துடன் உலகின் மற்ற கார்களிலும் இல்லாத வகையில் சிறப்பான டிரைவிங் திறன்களை இந்த கார் கொண்டிருக்கும். இதில் கீலெஸ் இயக்கம் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும். "இது சிறப்பான செயல்திறன், அசத்தல் டிசைன், மிகச் சிறந்த தொழில்நுட்பம் கொண்டிருக்கும்" என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
ஓலா எலெக்ட்ரிக் கார் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவை தவிர புதிய எலெக்ட்ரிக் கார் விவரங்கள் மர்மமாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன ஆலையாக ஓலா பியுச்சர் பேக்டரி உருவாக்கப்பட்டு வருவதாக அறிவித்து இருந்தார். இந்த ஆலையில் ஆண்டுக்கு பத்து லட்சம் ஸ்கூட்டர்கள், அதாவது ஒவ்வொரு இரு நொடிகளுக்கும் ஒரு ஸ்கூட்டர் வீதம் உற்பத்தி செய்ய முடியும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்