என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கார்
நவம்பரில் இந்தியா வரும் முற்றிலும் புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி
- ஜீப் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் செரோக்கி மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய ஜீப் ஃபுல்-சைஸ் எஸ்யுவி மாடல் இந்திய ஆலையிலேயே அசெம்பில் செய்யப்பட இருக்கிறது.
ஜீப் இந்தியா நிறுவனம் 2022 கிராண்ட் செரோக்கி மாடலை நவம்பர் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கிராண்ட் செரோக்கி மாடல் இந்தியாவில் ஜீப் அசெம்பில் செய்யும் நான்காவது மாடல் ஆகும். முன்னதாக ஜீப் காம்பஸ், மெரிடியன் மற்றும் ராங்ளர் போன்ற மாடல்களை ஜீப் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவை அடுத்த ரங்கூன் ஆலை ஜீப் நிறுவனத்தின் வலதுபுற டிரைவ் யூனிட்களுக்கான உற்பத்தி மையமாக மாறுகிறது. புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த என்ஜின் செயல்திறன் பற்றி ஜீப் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.
இது மட்டுமின்றி புதியகாரில் குவாட்ரா-டிராக் 4x4 சிஸ்டம்- ஆட்டோ, ஸ்போர்ட், ஸ்னோ மற்றும் மட்/சேண்ட் என நான்கு டிரைவ் மோட்கள் வழங்கப்பட இருக்கிறது. டிசைனை பொருத்தவரை புதிய தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 7 ஸ்லாட் கிரில், எல்இடி டிஆர்எல்-கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், டூயல் எக்சாஸ்ட் டிப், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.
காரின் உள்புறத்தில் ADAS அம்சங்கள், 10.1 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பவர்டு முன்புற இருக்கைகள், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங், டூயல் டோன் இண்டீரியர் தீம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்