search icon
என் மலர்tooltip icon

    கார்

    மாருதி சுசூகி
    X
    மாருதி சுசூகி

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரோலி: புதிய ஹைபிரிட் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள மாருதி சுசூகி

    இந்த வாகனம் அதிக மின்சாரத்தை உருவாக்கக்கூடிய தன்மையுடன், 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் இன்ஜின் ஹைபிரிட்டில் வரும் என கூறப்படுகிறது.
    உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை ஈடு செய்வதற்கு மாற்று எரிபொருளை பயன்படுத்தும் வகையில் வாகனங்களை உருவாக்க மாருதி சுசூகி திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து 2024-25 ஆண்டுகளில் புதிய மின்சார எஸ்.யூ.வி ரக வாகனங்களை அந்நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

    தற்போது முதற்கட்டமாக வலிமையான ஹைபிரிட் இன்ஜின் கொண்ட எஸ்.யூ.வி கோப் ரக காரை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த வாகனத்திற்கு YTB என குறியீட்டு பெயர் வைக்கப்பட்டுள்ளது. YTB மூலம் எரிபொருளை நிறைய சேமிக்கலாம் என தெரிவித்துள்ளது.  இந்த YTB கியா சோனட் மற்றும் ஹுண்டாய் வென்யூ ஆகிய வாகனங்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வாகனம் அதிக மின்சாரத்தை உருவாக்கக்கூடிய தன்மையுடன், 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் இன்ஜின் ஹைபிரிட்டில் வரும் என கூறப்படுகிறது.

    இதைத்தவிர மாருதி சுசூகி நிறுவனம் 6 புதிய எஸ்.யூ.வி ரக கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த 6 மாடல்களில் 2 எஸ்.யூ.வி மாடல்களை சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கவுள்ளன. மேலும் மாருதி சுசூகி புதிய பிரெசா 4 மீட்டர் எஸ்.யூ.வி வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சுசூகி டொயோட்டோவின் மிட் அளவுள்ள எஸ்.யூ.வி இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×