என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
முன்பதிவில் புதிய மைல்கல் கடந்த மஹிந்திரா தார்
Byமாலை மலர்20 Oct 2020 8:50 AM GMT (Updated: 20 Oct 2020 8:50 AM GMT)
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் கார் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தார் மாடல் ஆப் ரோடு எஸ்யுவி இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய தார் மாடல் பேஸ் வேரியண்ட் ரூ. 9.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய தார் மாடல் முன்பதிவில் 15 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது. புதிய தார் மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 2 ஆம் தேதி முன்பதிவு துவங்கியது. இந்நிலையில் மைல்கல் குறுகிய காலக்கட்டத்தில் எட்டப்பட்டு உள்ளது. புதிய தார் மாடல் வாங்கியவர்களில் 57 சதவீதம் பேர் முதல்முறை கார் வாங்குவோர் என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X