என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்
X
சோதனையில் சிக்கிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் ரேலி
Byமாலை மலர்14 Dec 2021 7:21 AM GMT (Updated: 14 Dec 2021 7:21 AM GMT)
கே.டி.எம். நிறுவனம் தனது புதிய 390 அட்வென்ச்சர் ரேலி மோட்டார்சைக்கிளை இந்தியாவின் வட மாநிலங்களில் சோதனை செய்து வருகிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் புதிய 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதோனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. கே.டி.எம். 390 அட்வென்ச்சர் ரேலி பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் மேம்பட்ட மாடல் ஆகும்.
தற்போது விற்பனை செய்யப்படும் 390 அட்வென்ச்சர் மாடலை விட புதிய அட்வென்ச்சர் ரேலி மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் முன்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு, ஹெட்லேம்ப் சற்றே உயரமாக பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் முன்புற கவுல் அளவில் பெரியதாகவும், உயரமான விண்ட்ஸ்கிரீன், டி.எப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் ரேலி மாடலிலும் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. திறன், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X