என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
பஜாஜ் வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி மேலும் நீட்டிப்பு
Byமாலை மலர்14 May 2020 9:21 AM GMT (Updated: 14 May 2020 9:21 AM GMT)
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகையை மேலும் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவன வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டிக்கான வேலிடிட்டியை மேலும் நீட்டித்து இருக்கிறது. அதன்படி மார்ச் 20 ஆம் தேதியில் இருந்து மே 31 ஆம் தேதிக்குள் நிறைவுற்ற வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நிறைவுற்ற வாகனங்களுக்கு முன்னதாக மே 31 ஆம் தேதி வரை சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை நீட்டிக்கப்பட்டது.
தற்போதைய அறிவிப்பின் படி பஜாஜ் ஆட்டோ நிறுவன வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு நிறைவுற்றதும் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் பயன்களை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கும் வகையில் இவற்றுக்கான வேலிடிட்டி நீட்டிக்கப்படுவதாக பஜாஜ் தெரிவித்துள்ளது.
இதுதவிர பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை மீண்டும் திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. விற்பனை மையங்களை மீண்டும் திறப்பதற்கு தேவையான அனுமதிகளை உள்ளூர் அதிகாரிகளிடம் பெற்று இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X