என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
நாடுமுழுக்க கேடிஎம் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் மீண்டும் திறப்பு
Byமாலை மலர்13 May 2020 11:57 AM GMT (Updated: 13 May 2020 11:57 AM GMT)
கேடிஎம் நிறுவனம் நாடு முழுக்க இயங்கி வரும் தனது விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை மீண்டும் திறந்துள்ளது.
கேடிஎம் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெரிவித்துள்ளது.
இவற்றில் விற்பனை மற்றும் சர்வீஸ் சார்ந்த பணிகள் மீண்டும் துவங்கி வழக்கம் போல நடைபெறும் என தெரிகிறது. நாடு முழுக்க தற்பசமயம் எத்தனை விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் திறக்கப்பட்டு இருக்கும் என்பதையும் கேடிஎம் நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
சில விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தற்சமயம் திறக்கப்படும் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இயங்கும் என கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்படும் முன் இயங்கி வந்த கேடிஎம் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X