என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கும் சுசுகி
Byமாலை மலர்12 Nov 2019 8:12 AM GMT (Updated: 12 Nov 2019 8:12 AM GMT)
சுசுகி நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை சோதனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான சுசுகி இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விரைவில் சோதனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக ப்ரோடோடைப் மாடல்களை சோதனை செய்ய சுசுகி திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பேட்டரி ஸ்டேஷன் மற்றும் சார்ஜிங் வசதியின்மை நிலவுவதாக சுசுகி கருதுகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிடும் போது மாருதி சுசுகி கட்டமைக்கும் உள்கட்டமைப்புகளை பயன்படுத்திக் கொள்ள சுசுகி திட்டமிடுகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர இன்னும் சிலகாம் ஆகும் என சுசுகி கருதுகிறது. இந்திய சந்தையில் முதல் இரு தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்கள் வெற்றி பெறாமல் போகலாம் என்றும் சுசுகி நினைக்கிறது. தற்சமயம் எலெக்ட்ரிக் வாகனம் சார்ந்த ஆய்வுகளில் சுசுகி ஈடுபட்டுள்ளது.
நாட்டில் காற்று மாசு அளவை குறைக்கவும், அதிகரிக்கும் பெட்ரோல் பயன்பாட்டை கட்டுக்குள் வைக்கும் நோக்கிலும் ஆட்டோமொபைல் துறையை எலெக்ட்ரிக் மயமாக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியமும் வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X