search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    திடீரென தீப்பிடித்து எரிந்த ஸ்கோடா கார் - அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?
    X

    திடீரென தீப்பிடித்து எரிந்த ஸ்கோடா கார் - அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

    • ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லேவியா மாடல் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அரங்கேறியது.
    • ஸ்லேவியா கார் ஸ்கோடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய செடான் ரக மாடல் ஆகும்.

    வாகன நிறுத்தம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்கோடா ஸ்லேவியா மாடல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கடந்த ஜூன் மாத வாக்கில் இந்த சம்பவம் அரங்கேறியது. ஸ்கோடா கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

    வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து ஸ்கோடா நிறுவனம் கார் உரிமையாளரை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளது. சம்பத்தன்று காரின் உரிமையாளர் தனது ஸ்லேவியா மாடலை இரவு 10 மணிக்கு வாகன நிறுத்தத்தில் நஇறுத்தி இருக்கிறார். விடியற்காலை 3 மணி அளவில் கார் தானாக தீப்பிடித்து எரிந்து இருக்கிறது. இது குறித்து வெளியான வீடியோவில் கார் வாகன நிறுத்தத்தின் தரைதளத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

    கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், அதனை நிறுத்த பல முறை முயற்சித்தும் தீ கட்டுக்கள் வரவில்லை. மேலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த போதிலும் காரில் பற்றிய தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. கார் வாங்கியதில் இருந்து வெறும் 4 ஆயிரம் கிலோமீட்டர்களே ஓடிய நிலையில், ஸ்லேவியா கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது பற்றிய வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து ஸ்கோடா நிறுவனம் தரப்பில் உரிமையாளரிடம் அவற்றை நீக்க வலியுறுத்தப்பட்டது.

    பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து காரின் உரிமையாளர் கார் தீப்பிடித்து எரியும் காட்சிகள் அடங்கிய வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து எடுத்தார். அதன் ஸ்கோடா ஆட்டோ இந்தியா சார்பில் குழு ஒன்று எரிந்த காரில் சோதனை நடத்தியது. எனினும், ஸ்கோடா தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பின் காரின் உரிமையாளர் கார் காப்பீடு செய்யப்பட்ட நிறுத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்.

    நான்கு மாத போராட்டத்திற்கு பின் காரின் உரிமையாளருக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் புதிய கார் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய விசாரணையில் கார் உற்பத்தியின் போது தவறுகள் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. எனினும், ஸ்கோடா இந்தியா சார்பில் தவறுக்கு பொறுப்பேற்கப்படவில்லை என்றும் தொடர்ந்து வாக்குவாதம் செய்யப்பட்டதாகவும் காரின் உரிமையாளர் தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×