search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    போர்டு இகோஸ்போர்ட்
    X
    போர்டு இகோஸ்போர்ட்

    சென்னையில் போர்டு கார் உற்பத்தி மீண்டும் துவக்கம்

    போர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் மீண்டும் கார் உற்பத்தி துவங்கி இருக்கிறது.


    போர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் இகோஸ்போர்ட் மாடல் உற்பத்தி துவங்கி இருக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் இகோஸ்போர்ட் மாடல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன. 

    இந்த ஆண்டு இறுதிக்குள் போர்டு நிறுவனம் சுமார் 30 ஆயிரம் இகோஸ்போர்ட் மாடல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சென்னை ஆலை பணியாளர்கள் யூனியனை சேர்ந்தவர், செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். 

     போர்டு இகோஸ்போர்ட்

    அப்போது, 'சென்னை ஆலையில் திட்டமிட்டப்படி உற்பத்தி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் செயல்படும் ஆலைகளை மூட முடிவு செய்திருக்கும் மூத்த அதிகாரிகளை சந்திக்க யூனியன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,' என அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×