என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இந்தியாவில் உற்பத்தியை நிறுத்திய போர்டு
Byமாலை மலர்11 Sep 2021 4:06 AM GMT (Updated: 11 Sep 2021 4:06 AM GMT)
போர்டு மோட்டார் கோ நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை முழுமையாக நிறுத்துகிறது.
போர்டு மோட்டார் கோ நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது. இதன் காரணமாக இந்தியாவில் செயல்பட்டு வரும் இரண்டு போர்டு உற்பத்தி ஆலைகள் மூடப்பட இருக்கின்றன. போர்டு நிறுவனத்துக்கு இந்தியாவில் சென்னையை அடுத்த மறைமலைநகர், குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள சானந்த் ஆகிய இடங்களில் தொழிற்சாலை உள்ளது.
இந்தியாவில் வாகன உற்பத்திக்காக போர்டு நிறுவனம் சுமார் ரூ.250 கோடி முதலீடு செய்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விற்பனை பாதிப்பு, தொடர் நஷ்டம் காரணமாக இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதாக போர்டு நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது.
தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும், வாகன இயக்கங்களுக்கான வாடிக்கையாளர்களுக்கு முழுமையான உதவிகள் வழங்கப்படும் என்றும் போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. போர்டு நிறுவனத்துக்கு நஷ்டம் மட்டும் ரூ.200 கோடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹார்லி டேவிட்சன் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தனது வாகனங்கள் உற்பத்தியை நிறுத்தின. அந்த வரிசையில் தற்போது போர்டு நிறுவனமும் இணைந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X