என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
ஒரே நாளில் 70 - டாடா மோட்டார்ஸ் அதிரடி
Byமாலை மலர்4 Sep 2021 10:54 AM GMT (Updated: 4 Sep 2021 10:54 AM GMT)
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை மையங்கள் எண்ணிக்கை ஒரே நாளில் அதிகரித்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒரே நாளில் 70 புதிய விற்பனை மையங்களை திறந்துள்ளது. புது விற்பனை மையங்கள் நாடு முழுக்க 53 நகரங்களில் திறக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலக்கட்டத்திற்கு முன், டாடா மோட்டார்ஸ் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு துவக்கம் முதலே சபாரி எஸ்.யு.வி. பின் டியாகோ என்.எக்ஸ்.ஜி. மற்றும் டிகோர் இ.வி. போன்ற மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது விற்பனை மையங்கள் மூலம் வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
புது விற்பனை மையங்கள் மூலம் கர்நாடகா, தமிழ் நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கொச்சி போன்ற நகரங்களில் கூடுதல் கவனம் செலுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X