என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
உற்பத்தியை 60 சதவீதம் வரை குறைக்கும் மாருதி சுசுகி
Byமாலை மலர்2 Sep 2021 9:09 AM GMT (Updated: 2 Sep 2021 9:09 AM GMT)
மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புது அறிவிப்பு காரணமாக கார் வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.
மாருதி சுசுகி நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் தனது கார் உற்பத்தி பணிகளை 60 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. நாட்டின் முன்னணி பயணிகள் வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி, சந்தையில் நிலவும் சிப்செட் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி குறைக்கப்படுவதாக தெரிவித்து உள்ளது.
கடந்த மாதம் சுசுகி மோட்டார் குஜராத் உற்பத்தி ஆலையில், செமிகண்டக்டர் தட்டுப்பாடு காரணமாக சில நாட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது. செப்டம்பரில் ஹரியானா மற்றும் சுசுகி மோட்டார் குஜராத் ஆலைகளிலும் உற்பத்தி குறைக்கப்பட்டு இருக்கிறது.
ஜூன் மாதம் உற்பத்தி பணிகள் முழுவீச்சில் நடைபெற்ற போது, மாருதி நிறுவனம் 1,70,719 யூனிட்களை உற்பத்தி செய்து இருந்தது. செப்டம்பரில் மாருதி நிறுவனம் 68 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளது. பண்டிகை காலக்கட்டத்தில் இதுபோன்ற சூழல் சந்தையில் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X