என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இந்தியா ஆட்டோ எக்ஸ்போ ஒத்திவைப்பு - புதிய தேதிகள் விரைவில் அறிவிப்பு
Byமாலை மலர்4 Aug 2021 9:46 AM GMT (Updated: 4 Aug 2021 9:46 AM GMT)
2022 பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் துவங்க இருந்த இந்தியா ஆட்டோ எக்ஸ்போ விழா புதிய தேதிகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
2022 இந்தியா ஆட்டோ எக்ஸ்போ விழா ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனாவைரஸ் தொற்றின் மூன்றாவது அலை அச்சம் காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் மிகப்பெரும் ஆட்டோ நிகழ்வுகளில் ஒன்றாக இந்தியா ஆட்டோ எக்ஸ்போ இருக்கிறது. வழக்கமாக இவ்விழாவில் பெரும்பாலானோர் கலந்து கொள்வார்கள். இதுபோன்ற விழாவில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது சற்றே சவாலான காரியம் என்பதால், தொற்று பரவும் அபாயம் அதிகம் ஆகும்.
முந்தைய அறிவிப்பின் படி 2022 இந்தியா ஆட்டோ எக்ஸ்போ விழா 2022 பிப்ரவரி 2 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டது. இவ்விழா கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X