என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
வாரண்டியை எட்டு ஆண்டுகளுக்கு நீட்டித்த டொயோட்டா
Byமாலை மலர்29 July 2021 9:20 AM GMT (Updated: 29 July 2021 9:20 AM GMT)
டொயோட்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் முதல்முறையாக நீ்ண்ட கால வாரண்டியை அறிவித்து இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 2021 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகன பேட்டரிக்கான வாரண்டியை எட்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. சந்தையில் பேட்டரிக்கு வழங்கப்படும் வாரண்டிகளில் இதுவே அதிகம் ஆகும்.
நேற்று (ஜூலை 28) இயற்கை பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டதை தொடர்ந்து டொயோட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டது. புதிய அறிவிப்பு டொயோட்டா செல்ப்-சார்ஜிங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்து இருக்கிறது.
தற்போது கேம்ரி ஹைப்ரிட் மற்றும் வெல்பயர் மாடல்களை டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களின் பேட்டரிக்கும் முன்னதாக 1 லட்சம் கிலோமீட்டர் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வாரண்டி வழங்கப்பட்டது.
புது அறிவிப்பின்படி, இந்த வாரண்டி எட்டு ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிலோமீட்டர்கள் என அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. முன்னதாக ப்ரியஸ் மற்றும் கேம்ரி போன்ற மாடல்களில் எலெக்ட்ரிக் தொழில்நுட்பத்தை டொயோட்டா அறிமுகம் செய்தது. தற்போது கேம்ரி மற்றும் வெல்பயர் மாடல்களில் ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X